தமிழக சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 16-இல் தாக்கல் செய்யப்படுகிறது.
14-ஆவது சட்டப் பேரவையின் 11-வது கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 20-இல் தொடங்கி, 23-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், பிப்ரவரி 16 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் பேரவை செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் திங்கள்கிழமை அறிவித்தார்.
அன்றே 2016-17-ஆம் ஆண்டு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாள்கள் நடக்கும்? அறிக்கை மீதான விவாதம் 17 முதல் 19-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடத்தப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய அறிவிப்புகள்
வெளியாகும்? கடைசி கூட்டத் தொடர் என்பதால், சில புதிய அறிவிப்புகளும்
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் மக்களைக் கவரும் சில
அறிவிப்புகளை பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார்
என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.14-ஆவது சட்டப் பேரவையின் 11-வது கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 20-இல் தொடங்கி, 23-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், பிப்ரவரி 16 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் பேரவை செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் திங்கள்கிழமை அறிவித்தார்.
அன்றே 2016-17-ஆம் ஆண்டு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாள்கள் நடக்கும்? அறிக்கை மீதான விவாதம் 17 முதல் 19-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடத்தப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
6-வது அறிக்கை தாக்கலாகிறது: 2011-ஆம் ஆண்டு மே மாதம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. 2011-12-ஆம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை முதல் 2015-16-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை வரை 5 அறிக்கைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். ஆறாவது முறையாக இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.
தேர்தல் கூட்டணி குறித்து...: இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி-பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதிமுக அரசின் கடைசி கூட்டத் தொடர் என்பதால் பரபரப்பாகவும் இருக்கும் என்றும் தேர்தல் கூட்டணி குறித்த விவாதங்கள் அதிகளவு நடைபெறறும் வாய்ப்பு என்றும் சட்டப் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்தம் 187 நாள்கள்:
14-வது சட்டப் பேரவை மொத்தம் 187 நாள்கள் கூடியுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...