இணையதளத்தில் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வெவ்வேறு கட்டணங்களை
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விதிப்பதை தடை செய்து ‘டிராய்’ உத்தரவு
பிறப்பித்துள்ளது.
கட்டண வசூல்
‘இணையதள சேவைகளுக்கு வெவ்வேறுவகையான கட்டணங்களுக்கு தடை விதித்தல்’ தொடர்பான புதிய உத்தரவு ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையம் (டிராய்) நேற்று பிறப்பித்தது. அதில், இணைய சமநிலைக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமும் இணையதளத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக வெவ்வேறு வகையான கட்டணங்களை வசூலிக்கக்கூடாது. சலுகைகளையும் அறிவிக்கக்கூடாது. இந்த உத்தரவில் குறிப்பிட்டதற்கு எதிராக எந்தவகையான ஒப்பந்தத்தையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியாரிடமோ, மற்ற நிறுவனங்களிடமோ மேற்கொள்ளக்கூடாது.
இந்த உத்தரவுக்கு முரணாக ஏற்கனவே பின்பற்றி வரும் திட்டங்களை 6 மாத காலத்துக்குள் வாபஸ் பெற வேண்டும்.கட்டண வசூல்
‘இணையதள சேவைகளுக்கு வெவ்வேறுவகையான கட்டணங்களுக்கு தடை விதித்தல்’ தொடர்பான புதிய உத்தரவு ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையம் (டிராய்) நேற்று பிறப்பித்தது. அதில், இணைய சமநிலைக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமும் இணையதளத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக வெவ்வேறு வகையான கட்டணங்களை வசூலிக்கக்கூடாது. சலுகைகளையும் அறிவிக்கக்கூடாது. இந்த உத்தரவில் குறிப்பிட்டதற்கு எதிராக எந்தவகையான ஒப்பந்தத்தையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியாரிடமோ, மற்ற நிறுவனங்களிடமோ மேற்கொள்ளக்கூடாது.
ரூ.50 ஆயிரம் அபராதம்
நெருக்கடியான சமயங்களில் அவசர சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கட்டண குறைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நெறிமுறைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீறும் பட்சத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உத்தரவை ‘டிராய்’ நிறுவனம் மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...