''மாணவர்களிடம் விண்ணப்பத்தை
எதிர்பார்க்காமல், அதிகாரிகள் பாடத்தை மாற்ற வேண்டும். அப்பாவி ஏழை
மாணவர்கள் பாதிக்கும்படி நடக்கக் கூடாது. இதுகுறித்து, பிறமொழி
மாணவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், 98843 13344 எண்ணில், என்னை தொடர்பு
கொள்ளலாம்.
சி.எம்.கே.ரெட்டி,
தலைவர்
மொழி சிறுபான்மை பாதுகாப்பு பேரவை
தமிழில் தடுமாறும் திருவள்ளூர்:
தமிழக
பொதுத் தேர்வுகளில், 10 ஆண்டுகளாக, திருவள்ளூர் மாவட்டத்தில் தான், தமிழ்
பாடத்தில் அதிகம் பேர் தோல்வியடைந்து, தேர்ச்சி சதவீதம்
பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், இங்கு தெலுங்கை தாய்மொழியாக கொண்ட
மாணவர்கள் அதிகம் உள்ளதே. இவர்களின் பேச்சு வழக்கு தெலுங்கு என்றாலும்
படிப்பில் தமிழும் படித்தனர். பல பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள்
நியமிக்கப்படாமல், தேர்ச்சி பாதிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த நிலை மற்ற
மாவட்ட மாணவர்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என, பெற்றோர் அச்சம்அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -