சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் சுமார் 4 லட்சம் பேர் பயிலுகின்றனர் என அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன் தெரிவித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 2016-17 ஆண்டிற்கான விண்ணப்ப விற்பனை தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் 89 படிப்பு மையங்களும், 78 படிப்பு மையங்களும் இயங்குகின்றனர். இம்மையங்களில் மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை பெறலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பத்தும், பணம் செலுத்தியும் அனுமதி சேர்க்கை பெறலாம். மொத்தம் 259 படிப்புகள் டெக் அனுமதி பெற்று நடத்தப்படுகிறது. கடந்த 2015-16ம் ஆண்டு 1 லட்சத்து 536 பேர் அனுமதி சேர்க்கை பெற்றனர். இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு ரூ.103 கோடியே 13 லட்சத்து 4,894 ரூபாய் வருவாய் வந்துள்ளது.
இந்த 2016-17 கல்வி ஆண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் அனுமதி சேர்க்கை செய்யவும், ரூ150 கோடி வருவாய் ஈட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி மைய மாணவர்களுக்கு கடந்த ஆண்டு சென்னை,மதுரை, சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், அண்ணாமலைநகர் பகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 524 பேர் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.
எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் அனுமதி சேர்க்கை செய்யும் போதே புத்தகங்கள் அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கலையில் நேரடியாக பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் விரைவில் ஆன்மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்படும் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.