Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உங்கள் வேலையைப் பாருங்கள் (சுதர்மம்) து.ராமராஜ்
பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் "சுதர்மம்" என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். மிக அழகான பொருள் பொதிந்த சொல் அது.
(சுதர்மம் என்பது உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று அர்த்தம்)
சுதர்மம் ஒருவனுடைய பிறப்பாலும், இருப்பாலும், தன்மையாலும் நிர்ணயமாவது. அதன்படி ஒருவன் நடந்து கொள்ள வேண்டும். அது தானே இயற்கை என்று தோன்றினாலும் மனிதர்கள் பல சமயங்களில் அப்படி நடந்து கொள்வதில்லை.
அர்ஜுனன் மிகச்சிறந்த வீரன். குருக்ஷேத்திரப் போருக்கு முன் எத்தனையோ போர்களை நடத்தியிருக்கிறான். எத்தனையோ பேர்களைக் கொன்றிருக்கிறான். அப்போதெல்லாம் தோன்றாத ஒரு கலக்கம் குருக்ஷேத்திரப் போரில் அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது. காரணம் எதிரணியில் தாத்தா பீஷ்மர், குரு துரோணர், குலகுரு கிருபாச்சார்யர் போன்றவர்கள் இருப்பது தான். அவர்களைக் கொன்று விட நேரிடும் என்பது அவனுக்குப் பெரிய பச்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. எத்தனையோ போர்களில் எத்தனையோ பேரைக் கொன்று குவித்த அவனுக்கு தர்மத்தை நிலைநாட்டும் இந்தப் போரில் திடீர் என்று ஞானோதயம் வருகிறது. "போர் நல்லதல்ல". பிறப்பாலும், இருப்பாலும், தன்மையாலும் வீரனான அவனுக்கு இப்போது போரை விட துறவறம் கூட நல்லது தான் என்ற சிந்தனை வருகிறது. அவனுடைய இந்த சிந்தனை உண்மையான ஞானத்தால் எழுந்திருந்தால், உண்மையான தன்மையால் அமைந்திருந்தால் ஸ்ரீகிருஷ்ணர் அவனுக்குப் போரை உபதேசித்திருக்க மாட்டார். இப்போது விட்டால் காலமெல்லாம் துறவியாக வாழக்கூடியவனுமல்ல அவன். உள் நோக்கத்தோடு, போலியாய் தோன்றும் இது போன்ற வாய் ஜாலங்களை இகழ்ந்து அவர் இது உன் தர்மமல்ல என்று அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்.
இப்படி பிரச்சினைகள் வரும் போது பலருக்கும் தங்கள் தர்மத்தை விட அடுத்தவர்கள் தர்மம் மிகவும் மனம் கவர்வதாய் தோன்றக்கூடும். அவன் வேலையைச் செய்வதை விட அடுத்தவர் வேலையைச் செய்வது சுலபமாக தெரியக்கூடும். இது அக்கரை பச்சை மனோபாவமே.
இந்த மனோபாவத்தை மிக அழகாக சில வருடங்களுக்கு முன் வெளிவந்த மலையாளத் திரைப்படமான "சிந்தாவிஷ்டயாய சியாமளா"வில் கதாசிரியரும், நடிகருமான சீனிவாசன் காட்டியிருக்கிறார். சோம்பேறியான கதாநாயகனுக்கு தன் ஆசிரியர் வேலை போரடித்துப் போகிறது. சன்னியாசிகள் எவ்வளவு நிம்மதியாக வேலையில்லாமல் சும்மா இருக்கிறார்கள் என்று தோன்ற மனைவியையும், குழந்தைகளையும் விட்டு ஓடிப் போகிறான். ஒரு துறவிகள் மடத்தில் போய் சேர்கிறான். அங்கும் மற்றவர்கள் ஆசிரமத்தை சுத்தம் செய்வது, தோட்டத்தைப் பராமரிப்பது, சமையல் செய்வது போன்று ஏதாவது வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இவனோ ஒரு வேலையும் செய்யாமல் தியானம் செய்கிறேன் பேர்வழி என்று காலத்தைக் கழிக்கிறான். அவனை ஒரு சிலர் கேலி செய்கிறார்கள். கோபப்படுகிறானே ஒழிய திருந்துவதில்லை. சில நாட்கள் பொறுத்துப் பார்த்த மடத்தலைவர் ஒருநாள் அவனை அழைத்து பிடித்த ஏதாவது ஒரு வேலையை மேற்கொள்ளுமாறு சொல்கிறார். இவன் எனக்குப் பிடித்த வேலையே தியானம் செய்வது தான் என்கிறான். தியானம் ஒரு வேலையல்ல என்றும் வேலையில் இருந்து ஓடி ஒளிவது துறவறம் அல்ல என்றும் புத்திமதி சொல்ல அங்கிருந்தும் கிளம்புகிறான். கடைசியில் எப்படி திருந்தி மனைவி மக்களுடன் சேர்கிறான் என்பது மீதிக் கதை. நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இது பல மனிதர்களின் போக்கைக் கோடிட்டுக் காட்டுகிறது.
பிறப்பாலும், இருக்கும் இடத்தாலும் சில கடமைகள் நமக்கு வருகின்றன. மகனாக, மகளாக, ஒரு பிரஜையாக, சமூகத்தின் அங்கமாக நமக்கு பல கடமைகள் வந்தமைகின்றன. நாம் மேற்கொள்ளும் பொறுப்புகளால் சில கடமைகள் ஏற்படுகின்றன. நமது அடிப்படைத் தன்மையாலும், திறன்களாலும் சில கடமைகள் உருவாகின்றன. அதுவே இந்த உலகத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. அந்தக் கடமைகளை, அந்த வேலைகளை எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதிலே தான் வாழ்க்கையின் வெற்றி நிர்ணயிக்கப் படுகிறது.
வினோபா பாவே சுதர்மத்தை ஒருவனின் தாயிற்கு ஒப்பிடுகிறார். தாயை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. நம் பிறப்பிலேயே அது தீர்மானிக்கப்பட்டு விடுகிற விஷயம். இந்தத் தாய் பிடிக்கவில்லை என்று இன்னொரு தாயை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. நல்லதோ, கெட்டதோ இந்தப் பிறப்பில் அவர் தான் நம் தாய். சுதர்மமும் அப்படியே என்கிறார் அவர்.
சுதர்மத்தைக் கடைபிடிக்கத் தவறும் போது நாம் பிறப்பின் அர்த்தத்தையே அலட்சியப்படுத்தி விடுகிறோம் என்று பொருள். அடுத்தவர் தர்மத்தைக் கடைபிடிக்கும் போது, நம் வேலையை விட்டு அடுத்தவர் வேலையைச் செய்யும் போது நாம் வேறு யாராகவோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாகிறது. உயிருள்ள வரை, உலகத்திலிருந்து ஏதாவது பெற்றுக் கொண்டிருக்கும் வரை சுதர்மத்தின் மூலமாகவே நாம் உலகிற்கு திருப்பித் தர வேண்டியிள்ளது.
எனவே சுதர்மம் என்னும் உங்கள் வேலையைப் பாருங்கள். ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்காதீர்கள். செய்யும் வேலை உங்களுடையது தானா என்று அவ்வப்போது பார்த்துக் கொள்வது நல்லது. எது சுதர்மம் என்ற குழப்பம் அர்ஜுனனுக்கு எழுந்தது போல் சில சமயங்களில் உங்களுக்குள்ளும் எழக்கூடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மனதை அமைதியாக்கி உங்கள் அந்தராத்மாவின் குரலைக் கேளுங்கள். அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் வழிகாட்டியது போல் உங்களுக்கு உங்கள் அந்தராத்மா வழிகாட்டும். உங்களுக்கு அதுவே பகவத்கீதை.
அன்புடன்-து.ராமராஜ்-TESTF-நாமக்கல்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








