'மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களை ஒரு தாளாக மாற்றியும், மொழி தொடர்பியல்
சார்ந்த செய்முறை தேர்வைகொண்டு வரவேண்டும்' எனவும் தமிழ்நாடு ஆசிரியர்
சங்கம் நடத்திய ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு
ஆசிரியர்முன்னேற்ற சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான ஆய்வரங்கம்,
புதுக்கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் நடந்தது.அதில்,
ஆய்வாசிரியர் கஸ்துாரி ரங்கன் பேசியதாவது:
பொதுத்தேர்வு
எழுதும் மாணவர்களுக்கான உளவியல் பிரச்னைகளை கட்டுப்படுத்த பயிற்சியும்,
தேவையற்ற பாடச்சுமைகளை குறைக்கவும் வழி செய்ய வேண்டும்.பத்தாம் வகுப்பு
மாணவர்கள் எழுதும் மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களை ஒரு தாளாக மாற்றியும்,
கூடுதலாக மொழித்தொடர்பியல் சார்ந்த செய்முறை தேர்வை கொண்டுவர
வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துசாமி
தலைமை வகித்தார். துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன் முன்னிலை
வகித்தனர். செயலர் ரமேஷ் சிறப்புரையாற்றினர்.







