இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் தமிழக அரசு சார்பில், அண்ணாபல்கலையால் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் தேதி, இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பங்கள் மட்டும் பெறப்படுகின்றன.
ஏப்ரல், 15 முதல், நேற்று முன்தினம் மாலை வரை, ஒரு லட்சத்து, 2,571 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த ஆண்டு, 2.5 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு, நாளை மறுநாள் வெளியானவுடன், விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.ஆன்லைனில் பதிவு செய்ய, மே, 24ம் தேதியும், விண்ணப்பங்களை அண்ணா பல்கலையில் தபால் மூலம் சேர்க்க, மே, 27ம் தேதி மாலை, 5:30 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.








