FLASH NEWS :விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பயிற்சி மையங்களிலும் நாளை தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11சட்டமன்ற தொகுதிகளில் நாளை 12.05.2016 தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும்.07.05.2016 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.இறுதியாக 12.05.2016 அன்று நடைபெறும் பயிற்சி வகுப்பு 07.05.2016 பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மட்டும் என உறுதி அளிக்கப்பட்டது.ஆனால் இன்று அனைவருக்கும் SMS அனுப்பப்பட்டு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதில் PO மற்றும் PO1 ஆகியவர்களுக்கு மட்டும் நடைபெறும் எனவும் சில செய்திகள் வெளிவருகிறன.முழுமையான தகவல் தெரியாததால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.









