What is failure ? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


What is failure ?

தோல்வி என்றால் என்ன? நீங்கள் எப்படி நினைத்தீர்களோ, ஒரு செயல் அப்படி நடக்காவிட்டால் அதை தோல்வி என்று கருதுகிறீர்கள். உலகில் எல்லா விஷயங்களும் நீங்கள் நினைக்கும்விதமாக நடக்கும் என்று அவசியமில்லை.
உலகம் ஒருபோதும் நீங்கள் நினைக்கும்விதமாக 100% நடந்து விடாது. ஓரளவுக்கு வேண்டுமானால் நீங்கள் விரும்பும்விதமாக நடக்கலாம். உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அடிப்படையாக நலவாழ்வையும், மகிழ்ச்சியையும் தேடுவதாகத்தான் இருக்கிறது. கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது அல்லது தொழில் தொடங்குவது, குடும்பங்களை உருவாக்குவது, உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது போன்ற எல்லா விஷயங்களுமே நலவாழ்வையும், மகிழ்ச்சியையும் தேடித்தான்.
எனவே, உங்கள் செயலின் நோக்கம் மகிழ்ச்சியும், நலவாழ்வும்தான். அவற்றை வெளிப்புறச் செயல்களின்மூலமாக அணுகுவதைவிட, நேரடியாகவே அதை அணுகலாம். தோல்வி என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்றால், நீங்கள் நினைத்தவிதமாக ஒருசில விஷயங்கள் நடக்காமல் இருப்பதைத்தான். மகிழ்ச்சியை பலவிதங்களில் பார்க்க முடியும். இன்றைய நாளில் இதை நீங்கள் மருத்துவரீதியாகக்கூட புரிந்துகொள்ள முடியும். எதை நீங்கள் ‘மகிழ்ச்சி’ என்று சொல்கிறீர்களோ, அது உங்கள் உடலுக்குள் உள்ள ஒரு இரசாயனம். எதை நீங்கள் ‘அமைதி’ என்று சொல்கிறீர்களோ, அதுவும்கூட உங்கள் உடலுக்குள் உள்ள ஒருவிதமான இரசாயனம். எதை பதற்றம், பயம், கோபம், துன்பம் என்று சொல்கிறீர்களோ, அவை ஒவ்வொன்றும் இரசாயனத்தின் அடிப்படையைக் கொண்டிருக்கின்றன. வெளிச்சூழலை நமக்கு வேண்டும்விதமாக உருவாக்கிக்கொள்ள, வெளிச்சூழலில் நமக்கு தேவைப்படும் வசதியையும், சௌகரியத்தையும் உருவாக்கிக்கொள்ள எப்படி அறிவியலும், தொழில்நுட்பமும் உள்ளதோ, அதேபோல உள்சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதற்கும் ஒரு விஞ்ஞானம் உள்ளது. உங்களுக்கு எப்படி தேவையோ, அப்படி உள்சூழலை உருவாக்கிக்கொள்ள உதவும் அறிவியலையும்,

தொழில்நுட்பத்தையும் நீங்கள் கண்டறிந்துகொண்டால், உங்கள் தன்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்பதை நீங்கள் அறிந்துகொண்டால் வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. வாழ்க்கையில் எல்லாம் உங்கள் திறமையைச் சார்ந்து நடக்கிறது. உங்கள் திறமையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுசேர்வதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்து, தற்செயலாக வேறு இடத்தை சென்றடைந்துவிட்டால் நீங்கள் எப்போதும் பயத்திலேயேதான் இருப்பீர்கள். உங்கள் திறமையின் காரணமாக ஒரு இடத்தை நீங்கள் அடைந்திருந்தால், அப்போது ஒருசில சூழ்நிலைகள் தவறாகப்போனாலும்கூட இன்னொரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது ஒரு பெரிய பிரச்னையாக இருக்காது. எனவே, தோல்வி என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்றால், நீங்கள் நினைத்தவிதமாக ஒருசில விஷயங்கள் நடக்காமல் இருப்பதைத் தான். எந்தச் சூழ்நிலையும் நீங்கள் நினைத்தவிதமாக 100% நடக்க வாய்ப்பில்லை என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஓரளவுக்கு மட்டுமே அது நீங்கள் நினைக்கும்விதமாக நடக்கும். வெளிப்புறச் சூழ்நிலைகள் எப்போதுமே இப்படித்தான் நடக்கும். உங்கள் மகிழ்ச்சி, உங்கள் அமைதி இவையெல்லாம் வெளிச்சூழலுக்கு அடிமைப்பட்டிருக்கும்போது உங்கள் மகிழ்ச்சி, உங்கள் நலவாழ்வு என்பது தற்செயலான ஒன்றாகத்தான் இருக்கும்.

வெளிப்புற சூழல்கள் 100% நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், உள்சூழ்நிலையில் முழுமையாக கட்டுப்பாட்டை நம்மால் எடுத்து வரமுடியும். வெளியே யாரும் அல்லது எதுவும் நீங்கள் விரும்பும்விதமாக நடக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நீங்களாவது, இந்த ஒரு உயிராவது முற்றிலும் நீங்கள் விரும்பும்விதமாக நடக்கவேண்டியது அவசியம். நீங்கள் விரும்பும்விதமாக இது நடக்குமானால், இதை ஆனந்தமாக வைத்துக் கொள்வீர்களா? அல்லது துன்பமாக வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? நிச்சயமாக ஆனந்தமாகத்தான். உங்கள் தன்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சியானவராக இருந்தால், உங்களுடைய உடல் மற்றும் மனத் திறன்கள் அதன் முழுமையான ஆற்றலோடு வெளிப்படும். உங்கள் வாழ்வில் நீங்கள் எவ்வளவு செய்திருக்கிறீர்கள், எவ்வளவு செய்யவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்னையில்லை. ‘நீங்கள் யார்’ என்பதன் முழுத் தன்மையையும் வெளிப்படுத்தி, முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி பார்த்திருக்கிறீர்களா? ஒருவர் அவரது உள்நிலை ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த முடிந்தால் அவர் முற்றிலும் ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்று சொல்லலாம். அதைத் தேடித்தான் நீங்கள் பயணிக்க வேண்டும்.

மற்றவர்களைப்போல் இருக்க முயற்சிக்க வேண்டியதில்லை. மற்றவர்கள் அடைந்த இலட்சியங்களை நோக்கி நீங்களும் பயணிக்கவேண்டிய அவசியமில்லை. உங்களுடைய முழுத்திறன் வெளிப்படுவதற்கு அனுமதியுங்கள். உங்கள் உள்தன்மையில் போதிய கவனம்செலுத்தி, உங்கள் தன்மையின்மூலமாகவே அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H