நற்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த _*விறகுவெட்டி*_ அவனைப்பார்த்தான். “ *கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்*.” என நினைத்துக்கொண்டே சென்றான்.
அடுத்ததாக _*திருடன்*_ ஒருவன் அந்த வழியாக வந்தான் “ *இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான்*“ என நினைத்துக்கொண்டே சென்றான்.
மூன்றாவதாக _*குடிகாரன்*_ ஒருவன் அந்த வழியாக வந்தான் .“ *காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்*” என நினைத்துக்கொண்டே சென்றான்.
சிறிது நேரத்தில் _*துறவி*_ ஒருவர் வந்தார். “ *இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்*” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.
*கதையின் நீதி*:-
_நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படி அப்படியே_.!!!
அந்த வழியாக வந்த _*விறகுவெட்டி*_ அவனைப்பார்த்தான். “ *கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்*.” என நினைத்துக்கொண்டே சென்றான்.
அடுத்ததாக _*திருடன்*_ ஒருவன் அந்த வழியாக வந்தான் “ *இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான்*“ என நினைத்துக்கொண்டே சென்றான்.
மூன்றாவதாக _*குடிகாரன்*_ ஒருவன் அந்த வழியாக வந்தான் .“ *காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்*” என நினைத்துக்கொண்டே சென்றான்.
சிறிது நேரத்தில் _*துறவி*_ ஒருவர் வந்தார். “ *இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்*” என அவரை வணங்கிவிட்டு சென்றார்.
*கதையின் நீதி*:-
_நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படி அப்படியே_.!!!