தமிழகத்தில் உள்ள, பொறியியல் கல்லுாரிகளில், இன்ஜி., படிப்புகளில்
சேர்வதற்கான, கலந்தாய்வு, ஜூன், 24ல் விளையாட்டுப் பிரிவுக்கும்; 25ல்,
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதே
போல்,பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும் என, அண்ணா பல்கலை
அறிவித்துள்ளது.
ஆனால், தொழிற்கல்விமாணவர்களுக்கான கவுன்சிலிங் எப்போது நடத்தப்படும் என,
அறிவிக்காததால், தொழிற்கல்வி மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.தொழிற்கல்வி
படித்த மாணவர்களுக்கு, 4 சதவீத ஒதுக்கீட்டின்படி, 7,000 இடங்கள்
கவுன்சிலிங்கின் மூலம் நிரப்பப்படும். எனவே, இந்த இடங்களுக்கு எப்போது
கவுன்சிலிங் நடத்தப்படும் என, மாணவர்கள் தேதியை எதிர்பார்த்துள்ளனர்.







