வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தேர்வை நடத்தலாம்; ஆனால், தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது' என கூறியது. கடந்த ஜன., 31ல், அண்ணா பல்கலை மூலம், தமிழ்நாடு மின் வாரியம் எழுத்துத் தேர்வை நடத்தியது; 75 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிந்து, ஐந்து மாதங்கள் ஆகியும், இதுவரை முடிவை வெளியிடாததால் பட்டதாரிகள், மின் வாரிய அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பட்டதாரிகள் கூறியதாவது: மின் வாரியம், முதல் முறையாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம், ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது; இது, வரவேற்கத்தக்கது. ஆனால், சிலர், 'தேர்வை நடத்தக் கூடாது' என, வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இதனால், தேர்வு முடிவை வெளியிடுவது தாமதம் ஆகி வருகிறது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை. மின் வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மற்ற அரசு தேர்வுகளில் பங்கேற்காமல் உள்ளோம்.
நடவடிக்கை தேவை : எனவே, மின் வாரியம் வழக்கு விசாரணையை விரைவாக முடித்து, எழுத்துத் தேர்வு முடிவை வெளியிட்டு, நேர்முகத் தேர்வையும் நடத்தி, விரைவாக ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.








