எப்போ கிடைக்கும் கலெக்டர் பதவி? கனவுகளுடன் காத்திருக்கும் இளம் ஐ.ஏ.எஸ்.,கள்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 5 July 2016

எப்போ கிடைக்கும் கலெக்டர் பதவி? கனவுகளுடன் காத்திருக்கும் இளம் ஐ.ஏ.எஸ்.,கள்!

தமிழகத்தில், பல மாவட்டங்களில், நீண்ட காலமாக கலெக்டர்கள் மாற்றப்படாத காரணத்தால், இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கலெக்டர் பதவி கிடைக்காமல், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றனர்.
நேரடியாக ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்கள்; பதவி உயர்வின் மூலம், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றவர்கள்; ஓரிரு ஆண்டுகளாவது, கலெக்டராகப் பணியாற்றுவது, அரசு அலுவல் விதிமுறையாகவும், மரபாகவும் உள்ளது.
மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள பணி என்பதால், ஒவ்வொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், கலெக்டராக பணியாற்றும் காலத்துக்காக, கனவுகளுடன் காத்திருப்பர்.
நேர்மையான, திறமையான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடையாளம் காணப்படுவது, அவர்கள் கலெக்டராக பணியாற்றும் காலகட்டங்களில் தான்.
தமிழகத்தில், சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் பலர், காலம் காலமாக அவர்களின் பெயர் சொல்லும் அளவுக்கு, மிக சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

* அசத்திய ஐ.ஏ.எஸ்.,கள்!

சகாயம், ராதாகிருஷ்ணன், இறையன்பு, உதயசந்திரன், சுப்ரியா சாஹூ, ககன்தீப்சிங் பேடி, ராஜேந்திர ரத்னு, முருகானந்தம் என, பலரை உதாரணமாக காட்ட முடியும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள் மட்டுமே, கலெக்டர் மற்றும் முக்கியமான மாநகராட்சி கமிஷனர் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலின் போது, பல தொகுதிகளில், ஆளுங்கட்சி வெற்றி வாய்ப்புக்கு, மாவட்ட தேர்தல் அலுவலராக இருந்த கலெக்டர்களே காரணம் என்றும் புகார் எழுந்தது. அதற்கேற்ப, இவர்களில் பலரை மாற்ற வேண்டும் என்று, எதிர்க்கட்சியினரும் தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்திருந்தனர். எட்டு மாவட்ட கலெக்டர்களும் மாற்றப்பட்டனர்.

* ஏழாண்டு கலெக்டர்!

ஆனால், தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதும், மீண்டும் அதே இடங்களில், அவர்கள் நியமிக்கப்பட்டனர். அது மட்டுமின்றி, நீண்ட காலமாக கலெக்டராக பணியாற்றும் சிலரும், இன்று வரை மாற்றப்படவே இல்லை.
உதாரணமாக, கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, கலெக்டராக பணியாற்றி, நேற்று தான் மாற்றப்பட்டார். தற்போது கோவை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிகரன், கோவை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் என, பல மாவட்டங்களில் ஏற்கனவே கலெக்டராக பணியாற்றியவர்.
இப்படி பலர், தொடர்ந்து பல ஆண்டுகளாக, வெவ்வேறு மாவட்டங்களில் கலெக்டர் பணியில் தொடர்ந்து வருகின்றனர். அதனால், 24 இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மூன்று ஆண்டுகளாக, கலெக்டர் பதவிக்காக காத்திருக்கின்றனர். இவர்களில், 17 பேர், நேரடி ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்கள்.
முதல்வர் தனிப்பிரிவு செயலராக இருந்த, இன்னசென்ட் திவ்யா உட்பட, ஏழு பேர் பதவி உயர்வில் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டவர்கள். இவர்களுக்கு மட்டுமின்றி, பல மாநகராட்சிகளில் கமிஷனராகவும், வணிகவரி உள்ளிட்ட துறைகளில், இணை கமிஷனர்களாகவும் பணியாற்றும் பலருக்கும், கலெக்டர் வாய்ப்பு கொடுக்க வேண்டியுள்ளது.
கலெக்டர் பணி என்பது, அதிகாரம் மிகுந்த பதவி என்பதோடு, சத்தமின்றி சம்பாதிப்பதற்கான பதவியாகவும் இருப்பதால், சில அதிகாரிகள் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதாக, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குமுறுகின்றனர்.

* அதிலும் பாரபட்சம்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குனர் பணியிடத்துக்கு, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போது, மதுரை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களைத் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும், அமைச்சர்களுக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., அல்லாத அதிகாரிகளே, இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதையும், அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் பணியாற்ற இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் யாரும் முன்வர மாட்டார்கள் என்பது, இவர்களின் அச்சமாக உள்ளது.
இந்த அச்சத்தைப் போக்கி, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கலெக்டர்களாக நியமித்து, முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான முதல் படியை, மாவட்டங்களில் துவக்க வேண்டும் என, முதல்வருக்கு இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பட்டியலில் காத்திருப்போர்!

கலெக்டர் பதவிக்காக காத்திருக்கும் பட்டியலில், மரியம், லட்சுமி பிரியா, ரோகிணி பாஜி பாஹர், பிரசாந்த் வல்னரே, ஷில்பா பிரபாகர் சதீஷ், என்.வெங்கடேஷ், சந்தீப் நந்துாரி, அருண்சுந்தர் தயாளன், டி.ஜி.வினய், கிரன் குராலா, டி.ஆனந்த், ஆர்.லலிதா, ப்ரவீன் பி.நாயர், சங்கர்லால் குமாவத், சுபோத்குமார், அஜய் யாதவ், ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர், நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்.

இவர்களைத் தவிர்த்து, இன்னசென்ட் திவ்யா, கே.எஸ்.கந்தசாமி, ஆர்.கண்ணன், சிவஞானம், நிர்மல்ராஜ், எஸ்.ஏ.ராமன், ஏ.அண்ணாதுரை ஆகியோர், பதவி உயர்வில் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றவர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H