Guru peyarchi 2016 predictions in Tamil | Kalvikural.com - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Guru peyarchi 2016 predictions in Tamil | Kalvikural.com

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்

குரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்..
கன்னி ராசிக்கு மாறும் குரு உங்கள் ராசிக்கு எந்த இடத்தில் இருக்கிறார் அதனால் உங்கள் ராசிப்படி உங்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பார்ப்போம்...
அதிக ஆதாயம் அடையும் ராசியினர் -ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம் இவர்கள் ராசிக்கு குரு 2,5,7,9,11 என முழு சுப பார்வை செலுத்துவதால் இந்த ராசியினருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்...
மேசம் ;அசுவினி,பரணி,கிருத்திக நட்சத்திரங்களை கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு ஆறாம் இடம் ருண ,ரோக ,சத்ரு ஸ்தானத்தில் மாறுகிறார் ..இது நோய்,கடன் குறிக்கும் இடம்.ராசிக்கு 6ல் குரு செல்வது மறைவு ஸ்தானமாகும்..குரு என்பது செல்வாக்கை மதிப்பு ,மரியாதையை குறிக்கும்..
செல்வாக்கு மறைந்தாலும்,10 ஆம் இடம் தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..தொழிலில் இதுவரை இருந்த சிக்கல்கள் குறையும்..ராசிக்கு இரண்டாமிடமாகிய தன ஸ்தானத்தை பார்வையிடுவதால் வருமானம் குறையாது..அதே சமயம் செலவுகள் அதிகமாகவே காணப்படும்.மருத்துவ செலவுகள் அதிகம் காணப்படும்.
வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை..பிறர் விசயங்களில் தலையிடுவதால் வீண் பகை உண்டாகும் காலம் இது..சிறு குழந்தைகள் மேச ராசியாக இருப்பின் கீழே விழுதல் ,அடிபடுதல் உண்டாக்கும்.திக பிடிவாதம் செய்வார்கள் ...படிப்பில் நாட்டம் குறைக்கும்.பெற்றோர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்..செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடவும்...புதிய முய்ற்சிகளை ,முதலீடுகளை தவிர்க்கவும்,கடன் வாங்குதலை முடிந்தளவு தவிர்க்கவும்.
ரிசபம் ;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.சேமிப்பு உயரும்,தங்கம் சேரும்.கடன் அடைபடும்.
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.திருமண தடைகள் விலகும்.ஒன்பதாம் பார்வையால் ராசியை பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும்..வசீகரம் உண்டாகும்...5ஆம் பார்வையால் பாக்யத்தை பார்ப்பதால் குலதெய்வம் அருள் உண்டாகும்..குலதெய்வ கோயிலில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.தந்தையால் லாபம் கிடைக்கும்..நீண்ட நாள் அசைகள் நிறைவேறும்.லாபத்தை குரு பார்க்கும்போது நஷ்டம் உண்டாக வாய்ப்பே இல்லை.
திருப்பதி போய் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என திருப்பதி பெருமாளே உங்களை ஏதேனும் ரூபத்தில் திருப்பதி தரிசனம் காண வைப்பார்.
மிதுனம்;மிருகசிரீடம்,திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரங்களை சார்ந்த மிதுனம் ராசி நண்பர்களே...
இதுவரை உங்க ராசிக்கு மூன்றாம் இடத்தில் மறைந்து இருந்த குரு பகவான் இப்போது சுகஸ்தானத்திற்கு வந்திருக்கிறார்..சுகத்திற்காக செலவு வைக்கப்போகிறார்....மருத்துவ செலவு வைப்பாரா அல்லது வாகனம்,நிலம்,சொத்து வாங்க வைத்து சுப செலவாக வைப்பாரா என்பது திசாபுத்தி அடைப்படையில் மாறும் என்றாலும்...உங்க ராசிக்கும் கன்னி ராசிக்கும் ஒரே அதிபதி புதன் தான் என்பதால் நல்ல செலவையே வைப்பார்...
வாகனம் வாங்க யோசித்து கொண்டிருந்தவர்கள் வாகனம் வாங்குவார்கள் வீடு கட்டலாமா வேண்டாமா என குழம்பி கொண்டிருந்தவர்கள் தெளிவான முடிவுக்கு வந்து வேலையை ஆரம்பித்து விடுவார்கள்.தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு உண்டாகும் அதன் மூலம் அலைச்சல்,மன உளைச்சலை தவிர்க்க முடியாது இளைஞர்கள் வேறு ஊர்,நகரம்,மாநிலம் தொழிலுக்காக இடம் விட்டு இடம் மாறுவார்கள்
10ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தொழிலில் நிரைய நல்ல மாறுதல்கள் உண்டாகும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்..12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும்.மதுரை மீனாட்சி வழிபாடு சிறப்பு.
கடகம் ;புனர்பூசம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரங்களை சார்ந்த உங்களுக்கு இதுவரை இரண்டில் குரு பகவான் குரு பலமாக இருந்து வந்தார் .இப்போது ராசிக்கு மூன்றாவது வீட்டில் மறைகிறார்..இது நல்ல பலன் கொடுக்கும் ஸ்தானம் அல்ல.குரு மறைவது செல்வாக்கை குறைக்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது..அதிக விரய செலவுகள் உண்டாக்கும்.பண முடக்கம் உண்டாகும் காலம் என்பதால் வருமானத்தை சிக்கனமாக செலவழிப்பது நல்லது.
பேச்சில் நிதானம் அவசியம்.தன்னம்பிக்கை அதிகம் கொண்ட நீங்கள் சில அசமயம் அதிகாரமாக பேசுவது உங்களை சுற்றி இருப்பவரை விலக செய்யும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை.கடன் கொடுத்தாலும் சிக்கல் கடன் வாங்கினாலும் சிக்கல்.தொழிலில் முக்கிய முடிவு எடுக்கும்போது நன்கு யோசித்து செயல்படவும். மருத்துவ செலவு உண்டாகும் காலம் என்பதால் வாகனங்களில் செல்கையில் கவனம் தேவை.தாய்க்கு மருத்துவ செலவு உண்டு..இட மாறுதல் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழியில் வர வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.தந்தையால் வருமானம் .
ராசிக்கு லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் விரய செலவுகள் இருந்தாலும் வருமானத்துக்கு தடையில்லை.ஏதேனும் ஒரு வழியில் வருமானம் வந்து சேரும்.திருச்செந்தூர் ஒரு முறை சென்று முருகனை வழிபட்டு வரவும்.
சிம்மம் ;மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரங்களை கொண்ட சிம்ம ராசியினருக்கு இதுவரை ஜென்மத்தில் குரு இருந்து படாத பாடு படுத்தினார் குரு ஜென்மத்தில் இருந்தபோது ராமர் வனவாசம் சென்றார்.அது மட்டும்தான் போகலை என புலம்பி வந்த உங்களுக்கு இனிய செய்தியாக குருபலம் கனிந்திருக்கிறது.
ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு வந்தால் பணம் பெருகும்.லாபம் குவியும்..வருமானம் பல மடங்காகும்..நல்லதெல்லாம் நடக்கும் கெட்டதெல்லாம் ஒழியும்...ஆசைப்பட்டது தானாக நடக்கும்.மதிப்பும்,மரியாதையும்,செல்வாக்கும் உயரும்.திருமண முயற்சிகள் கைகூடும்..தங்கம் சேரும்,.கடன்கள் அடையும்..பிரிந்தவர் ஒன்று சேர்வர். பதவி உயர்வு கிடைக்கும்.வீடு கட்டலாம்..வழக்கு சாதகமாக முடியும்.குழந்தை பாக்யம் உண்டாகும்.
ராசிக்கு 6ஆம் இடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் ஓடி ஒளிவர்.கடன்கள் குறையும்.ராசிக்கு எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் தண்ட செலவுகள் வராது வட்டி கட்டும் நிலை இனி இருக்காது.அதிர்ஷ்டம் உண்டாகி, எதிர்பாராத வசூலாகாத பணம் வசூல் ஆகும்..பழனி முருகனை தரிசனம் செய்து வரவும்..

கன்னி ;உத்திரம்,அஸ்தம்,சித்திரை நட்சத்திரங்களை கொண்ட உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் குரு வருகிறார் ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே என அதிர்ச்சியாக வேண்டாம்..ஏழரை சனி முடிந்து விட்டது இந்த ஜென்ம குரு அதை விட பெருசா பாதிக்காது...ராசிக்கு ஜென்மத்தில் வந்து உட்காரும்போது தலையில் பாரம் இருப்பது போல அதிக சுமை உங்களை அழுத்தும்.பண நெருக்கடி,தொழில் நெருக்கடி,குடும்ப நெருக்கடி மூன்றும அதிக மன உளைச்சலை கொடுக்கும் காலம் என்பதால் ஜென்ம குரு பற்றி கெடுதலாக சொல்லப்பட்டிருக்கிறது...
ராசியில் குரு அமர்ந்தால் ராஜயோகம் என ஜோதிட விதி சொல்கிறது செல்வாக்கு உயர்ந்து அதன் மூலம் வரும் நெருக்கடி யாகவும் இருக்கலாம்...பெரிய பதவி கொடுத்து அதிக வேலைப்பளு கொடுப்பது போல இருக்கும்.வருமானமும் உண்டு. அதிக செலவினமும் உண்டு.குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும்..கோபம்,பிடிவாதம் விசயத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பகையை விலக்கலாம்..வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை.புதிய முதலீடு செய்கையில் ஜாதகத்தை ஒரு முறை முழுமையாக ஜோதிடரிடம் ஆய்வு செய்த பின் முடிவு எடுக்கவும்..
ராசிக்கு 5,7,9ஆம் இடங்களை குரு பார்வை செய்வது நன்மையை வாரி வழங்கும் கடும் நெருக்கடிகள் ஏற்படாது அப்படி ஏற்படினும் பிப்ரவர் 2017 முதல் நான்கு மாதங்களுக்கு வக்ர குரு உங்கள் சோதனைகளை நிவர்த்தி செய்து வெற்றி தரும்..வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று வழிபட்டு வரவும்.
துலாம் ;சித்திரை,சுவாதி,விசாகம் நட்சத்திரங்களை கொண்ட துலாம் ராசியினருக்கு இதுவரை லாபத்தில் இருந்து வந்த குரு ராசிக்கு 12ல் மறைகிறார்....துலாம் ராசிக்கு குரு கெட்டவர் அவர் மறைந்தால் நல்ல பலனையே கொடுப்பார் என சில நூல்கள் சொல்கின்றன...இருப்பினும் செல்வாக்கு,சொல்வாக்கு,பெரிய மனிதர்கள் ஆதரவு பெற்ற குரு மறைவது சுமாரான பலனையே கொடுக்க செய்யும் அதிக விரய செலவுகளை கொடுப்பார்.பாத சனி சில மருத்துவ செலவுகளை கொடுக்கும் வேளையில் அதற்கு குருவும் துணை புரிவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..முதலீடுகளை தவிர்க்க வேண்டும்..கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்க்க வேண்டும்.
வாகனத்தில் செல்கையில் எச்சரிக்கை தேவை உறவுகளிடம் கருத்து வேறுபாடு உண்டாக்கும்.. அதிக மனக்குழப்பம் காணப்படும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும்.
குரு உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டை பார்ப்பதால் சொத்து பிரச்சினை தீரும்..தாய் வழி ஆதரவு உறவுகள் ஆதரவு கிடைக்கும்.
ராசிக்கு 6ஆம் வீட்டை பார்ப்பதால் கடன்கள் அடைபடும்.வெளிநாடு முயற்சிகள் கைகூடும்..
ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டத்தால் பெரும் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.அது 2017 பிப்ரவரிக்கு மேல் அதிர்ஷ்டமான கலமாக இருக்கும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை சனிக்கிழமை நாளில் சென்று வழிபட்டு வரவும்.

-மீதி ராசிகளுக்கான பலன்கள் விரைவில்

உங்கள் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானது. உங்கள் ஜாதகத்தை பார்த்து திசாபுத்தி என்ன நடக்கிறது என பார்த்து அதற்கேற்றார்போல நடந்துகொண்டால் இன்னும் சிறப்பு.உங்கள் ஜாதக பலனை அறிய மெயில் செய்யவும். ஜோதிடர் நல்ல நேரம் சதீஷ்குமார் கணித்த சிறப்பு ஜாதக பலன் மெயில் மூலம் அனுப்பப்படும்..உங்கள் ஜாதகம் அனுப்பி 5 கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ 500.

தொடர்புக்கு sathishastro77@gmail.com

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H