காமராசர்
விருதுபட்டியில் முளைத்த விதையாய்
வெடித்து சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்
எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவு கூட்டை தாண்டி
உழைப்பின் நாயகனாய்
உண்மை தோழனாய் நாடே
வீடு நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறை பட்ட சிங்கமாய் ஏழைப் பங்காளராய்
கோழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்ணை
விதைத்த அறிவு பெட்டகமே
நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய் காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி
அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமெண்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க ....
காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரை வழி கடல் வழி
சாலையில் தன் உயிர்
வழி தந்த ஆட்சியால்
அணையா விளக்காய்
அமைதியின் சொருபமாய்
உறங்குகிறாய் நம் அன்னை மடியில் ....!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...