Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
சுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர்கள் சேரலாம் அதிகாரி தகவல்:
சுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர்கள் சேரலாம் அதிகாரி தகவல்:
பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு சுயநிதி பி.எட். கல்லூரிகளில்
ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் உடனடியாக சேரலாம் என்றும், அடுத்த
ஆண்டுதான் அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும்
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு
உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும், 703 சுயநிதி பி.எட். கல்லூரிகளும் என
மொத்தம் 724 பி.எட். கல்லூரிகள் உள்ளன. சுயநிதி பி.எட். கல்லூரிகளில் 2
வருட பி.எட். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தந்த
கல்லூரி நிர்வாகமே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு
உதவி பெறும் கல்வியல் கல்லூரிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
மூலம் நடந்து வருகிறது.மாணவர்கள் கலை, அறிவியல் படிப்பில் பட்டம் பெற 3
ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு அவர்கள் பி.எட். படிக்க 2 ஆண்டுகள் ஆகும்.
மொத்தம் 5 ஆண்டுகள் ஆவதை ஒருவருடம் குறைத்து ஒருங்கிணைந்த 4 வருட கால
பி.எட். படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அறிவிப்பு அதாவது பிளஸ்-2
முடித்த மாணவர்கள் பி.ஏ., அல்லது பி.எஸ்சி. பட்டப்படிப்புடன் கூடிய பி.எட்.
படிப்பை 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பாக படிக்கலாம் என்று கடந்த
23-ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் 4 வருட ஒருங்கிணைந்த
பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட். படிப்புகள் இந்த ஆண்டு முதல்
கல்வியல்கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அப்போது அவர்
அறிவித்தார்.
அதன்படி இந்த வருடம் 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு
அறிமுகப்படுத்தப்படுகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரி ஒருவர்
கூறியதாவது:- 13 கல்லூரிகள் 4 வருட பி.எட். படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர்
கல்வி குழுவில் அனுமதி பெறவேண்டும். பின்னர் தமிழ்நாடு ஆசிரியர்
பல்கலைக்கழகம் அனுமதி கொடுக்கவேண்டும். இந்த ஒருங்கிணைந்த 4 வருட பி.எட்.
படிப்பு கொண்டு வர 13 சுயநிதி பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர்
கல்விக்குழுவில் அனுமதி பெற்று விட்டன. அந்த கல்லூரிகள்தமிழ்நாடு ஆசிரியர்
கல்வி பல்கலைக்கழகத்திடம் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. உடனடியாக அந்த
அனுமதி கொடுக்கப்படுகிறது. அரசு பி.எட். கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை
ஆனால் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பு கொண்டு வர அரசு பி.எட்.
கல்லூரிகள் மற்றும் அரசுஉதவி பெறும் பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர்
கல்விக்குழுவில் விண்ணப்பிக்கவில்லை. தேசிய ஆசிரியர் கல்விக்குழு வருகிற
கல்வி ஆண்டில் அரசு கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிக்க
அனுமதி வழங்கும். அவ்வாறு வரும்போது கண்டிப்பாக கலந்தாய்வு நடத்தப்படும்.
அதனால் அரசு பி.எட். கல்லூரிகள் இந்த வருடம் ஒருங்கிணைந்த பி.எட்.
படிப்புகளை தொடங்குவது சிரமம். சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எனவே
அனுமதி பெற்றுள்ள 13 சுயநிதி பி.எட். கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட
பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. சுயநிதி
பி.எட். கல்லூரிகள் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விளம்பரம்
செய்வார்கள். அதன்பிறகு அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேரலாம். ஒரு
கல்லூரிக்கு தலா 100 இடங்கள் வீதம் 13 கல்லூரிகளிலும் 1,300 இடங்கள் உள்ளன.
4 வருடங்கள் கழித்து ஒவ்வொரு கல்லூரியிலும் 400 பேர் இருப்பார்கள்.முதல்
ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளும் ஆசிரியர் பயிற்சி குறித்து பாடம்
நடத்தப்படும்.
ஆனால் கடைசி வருடம்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். பாடத்திட்டம்
தயார் இந்த படிப்புக்கு பாடத்திட்டம் பல்கலைக்கழக நிபுணர்குழுவால்
தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது. 6-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை
ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பம் உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.
ஆசிரியராக வேண்டும் என்று உயரிய நோக்கம் உள்ளவர்கள் ஒருங்கிணைந்த 4 வருட
பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பது நல்லது. இவ்வாறு அதிகாரி
தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








