சுதந்திர தினத்தை ஒட்டி, 15 வகை கொண்டாட்டங்களுக்கு, கல்லுாரி மற்றும்
பல்கலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாட்டின், 70வது சுதந்திர தினம் வரும்,
15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 23ம் தேதி வரை, இரண்டு வார
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பள்ளி, கல்லுாரிகளில், நேற்று
முன்தினம் முதல், சுதந்திர தின நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.எல்லை
பாதுகாப்பு வீரர்களுக்கு, வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்புதல்;
மரக்கன்றுகள் நடுதல்; விடுதலை போராட்டத்தை நினைவுகூரும் சொற்பொழிவுகள்
நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இரண்டு வார நிகழ்ச்சிகளின்
நிறைவாக, ஆக., 23ல், நாடு முழுவதும் காலை, 11:00 மணிக்கு, அனைத்து மாணவ,
மாணவியரும் தேசிய கீதத்தை வாய் பாட்டாக பாட வேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...