நாட்டின் முக்கிய அதிவேக ரயில்களான ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய
ரயில்களில் ‘டைனாமிக் ஃபேர்’ கட்டண முறையை ரயில்வே அமைச்சகம்
அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து ஏர் இந்தியாவும் (நேற்று) சனிக்கிழமையன்று
தேசிய நாளிதழ்களில் விமான போக்குவரத்திலும் தற்போது மலிவான விலையில் பயணம்
செய்யலாம் என்று
விளம்பரப்படுத்தியிருந்தது. மேலும், அந்த விளம்பரத்தில்
ரயில்வே துறையை விட விமானத்தில் கட்டணம் மிகவும் குறைவு என்று
குறிப்பிடுவதுபோல் விளம்பரம் செய்திருந்தனர். இந்த விளம்பரத்தை ரயில்வே
துறை, அதிவேக ரயில்களின் கட்டணம் அறிவிக்கப்பட்ட மறுநாளில் ஏர் விமானம்
அறிவித்தது. ஒவ்வொரு ரயிலிலும் முதல் 10 சதவிகித படுக்கைகள், வழக்கமான
கட்டணத்தில் ஒதுக்கப்படும். அடுத்து, ஒவ்வொரு 10 சதவிகித படுக்கைகளுக்கும்
10 சதவிகிதம் கட்டணம் உயர்த்தப்படும். இப்படியே, உயர்த்திக்கொண்டே போய்,
சீட்டுக்கு ஏற்ப அதிகபட்சமாக 50 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்படும்.
இரண்டு அடுக்கு ஏ.சி. பெட்டிகள், சேர் கார் எனப்படும் இருக்கை வசதி கொண்ட
பெட்டிகள் ஆகியவற்றுக்கு கட்டண உயர்வு அதிகபட்சம் 50 சதவிகிதமாகவும்,
மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் அதிகபட்சம் 40 சதவிகிதமாகவும்
உயர்த்தப்பட்டது. சமீபத்தில் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் கூடுதல்
கட்டண அறிவிப்பை வெளியிட்டிருந்தபோது, அதை ஏர் இந்தியா நிறுவனம்
சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, ரயில் கட்டணத்தைக் காட்டிலும்
மிக குறைவான கட்டணத்தை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டது.
‘உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த
சூழலை சாதகமாக பயன்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது மக்களின்
மனதை கவருவதற்கு ஒரு வாய்ப்பு. மேலும் இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் மற்றும்
ஸ்பைஸ் ஜெட் போன்ற தனியார் ஏர் நிறுவனங்களுடன் போட்டியிட்டு வெற்றி
பெறுவதற்கும்
வாய்ப்பாக இருக்கும்’ என ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த
2014-2015ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.5859.91 கோடி
மதிப்பில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்ட இது சிறந்த வழியாக
இருக்கும் என அந்நிறுவனம் நம்புகிறது.