சென்னை பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, நாளை
வெளியாகிறது. சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., -
எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., - ஐ.டி., படிப்புகளுக்கு, மே, ஜூன்
மாதங்களில் தேர்வுகள் நடந்தன.
இதற்கான முடிவு, நாளை இரவு, 8:00 மணிக்கு,
பல்கலை இணையதளத்தில் வெளியாகிறது.'மறுமதிப்பீடுக்கு, செப்., 22ம்
தேதிக்குள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்' என, சென்னை பல்கலை, தலைமை
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் தெரிவித்து உள்ளார்.