டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி
குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை
நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப்.8)
கடைசிநாளாகும்.இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர்,
தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 5 ஆயிரத்து 451 பணியிடங்கள்
காலியாக உள்ளன.
இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கானஅறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது.கடந்த ஒரு மாதமாக இணைய வழியாக(www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். எழுத்துத் தேர்வானது நவம்பர் 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.விண்ணப்பிக்க கடைசி நாள் வியாழக்கிழமை (செப். 8) ஆகும். கட்டணத்தைச் செலுத்த வரும் 11-ஆம் தேதி கடைசியாகும். இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கானஅறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது.கடந்த ஒரு மாதமாக இணைய வழியாக(www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். எழுத்துத் தேர்வானது நவம்பர் 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.விண்ணப்பிக்க கடைசி நாள் வியாழக்கிழமை (செப். 8) ஆகும். கட்டணத்தைச் செலுத்த வரும் 11-ஆம் தேதி கடைசியாகும். இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.