அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்கள் கவனத்திற்கு..
ஒரு பள்ளியில் ஏற்படும்
காலிப்பணியிடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க முதலில் அப் பள்ளியில்
பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் என்.ஒ.சி. பெற்று பின்பு அதை சி.இ.ஓ
அவர்களுக்கு அனுப்பி அதன் பின் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப
வேண்டும். இயக்குனர் அவர்கள் அந்த பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை
போதுமானதாக உள்ளதா என்பதை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து பின்பு தான்,
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுக்கு ஆசிரியரை நியமனம் செய்ய அனுமதி
வழங்குவார்கள். நிர்வாகத்தினர் மத்தியில் பிரச்சினை இருந்து டி.இ.ஓ வின்
கன்ட்ரோலில் உள்ளதா அல்லது செக்கரட்டரி மூலம் நிர்வகிக்கப்படுகிறதா என்று
அறிந்து கொள்ளவும்.
பணியிடம் நிரப்ப போதிய மாணவர்களின் எண்ணிக்கை
இருக்கிறதா என்று பார்த்து சர்ப்லஸ் ஆகாமல் இருக்குமா என்பதை தயவு செய்து
நன்றாக விசாரித்து கொள்ளவும். நீங்கள் விரும்பும் பணியிடத்திற்கு உரிய
அனுமதி கிடைத்திருக்கிறதா என்றும், அவர்கள் கூறும் பள்ளியில்
காலிப்பணியிடம் இருக்கிறதா என்றும் தெரிந்து கொள்ளுங்கள். பதவி உயர்வில்
உள்ள ஆசிரியர்களிடம் முறையாக என்.ஒ.சி பெற்று விட்டார்களா என்றும் தெரிந்து
கொள்ளுங்கள். மிக முக்கியம் எக் காரணம் கொண்டும் முன்பணம் என்று ஐந்து
பைசா கூட கொடுக்க வேண்டாம். முடிந்தளவு நிர்வாகத்தினரை நேரில் பார்த்து
விவரங்களை தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம். இவர்தான் நிர்வாகி என்று
யாரையாவது காண்பித்து விடுவார்கள். மிகவும் கவனம் தேவை. பள்ளிக்கு நேரில்
சென்று பார்வையிடுவது மிக அவசியம். பள்ளி நிர்வாகிகளை நேரில் பார்ப்பதற்கு
உங்களை அனுமதிக்கவில்லை என்றால் உங்களை ஏமாற்றுவதற்கு தயாராகிவிட்டார்கள்
என்று அர்த்தம். நீங்கள் கொடுக்கும் முன் பணத்திற்கு எந்த உத்திரவாதமும்
இருக்காது. காசோலை கொடுக்கிறேன் என்பார்கள். JOINT ACCOUNT ல் பணம் போடலாம்
என்பார்கள். ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்பார்கள். மிக மிக கவனம் தேவை.
ஒருவேளை நீங்கள் பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று நிலை
வந்தால், நீங்கள் கொடுத்த பணம் முழுவதும் கிடைக்காது. பனி நிமித்தமாக சில
லட்சங்கள் செல்வாகிவிட்டன, மீதம் இதுதான் என்று குறைத்து கொடுப்பார்கள்.
அதுவும் சீக்கிரம் கிடைக்காது, அவர்களை தேடி நாயாக அலைந்து 2,3 வருடங்கள்
கழித்து தான் கிடைக்கும். பணத்தின் மதிப்பை உணர்ந்து உங்கள் செயல்பாடுகள்
இருக்கட்டும். முழு தொகையையும் வட்டிக்கு வாங்கி கொடுத்து விட்டு வட்டி
கொடுக்க முடியாமல் முழித்துக்கொண்டு கணவன் மனைவி இருவருக்கும் சண்டையிட்டு
உங்கள் சந்தோசங்களையும், வாரிசுகளிடம் காட்டவேண்டிய அன்பை கொடுக்க முடியாத
சூழ்நிலைக்கு சென்றுவிடாமல் பார்த்து கொள்ளுங்கள். நீங்கள்
தேர்ந்தெடுக்கும் வேலையை பற்றி நன்கு தெரிந்து யோசித்து முடிவெடுத்து
செயல்படுங்கள். எக் காரணம் கொண்டும் முழுத் தொகையை முதலில் கொடுத்து விட
வேண்டாம். திருச்சி பகுதியில் இவ்வாறு நடப்பதாக செவி வழி செய்தி. நன்றாக
யோசித்து முடிவெடுங்கள். CONTACT sunnetcafe19@gmail.com