அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்திடுக! அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 20 October 2016

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்திடுக! அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை:

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நடைமுறையாகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 1.7.2016-ல்
அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால், தமிழகத்தில் புதிய ஊதிய விகிதம் வழங்கப்படாத நிலையில் நாளது வரை அகவிலைப்படி உயர்வு வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. இது அரசு ஊழியர்களிடம் மிகுந்த வேதனையையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. தீபாவளிக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை வழங்குவது என்பது பல ஆண்டு கால நடைமுறையாகும்.

எனவே, மத்திய அரசின் அறிவிப்புக்குக் காத்திருக்காமல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 1.7.2016 முதல் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு தீபாவளிக்கு முன்பு அத் தொகை ரொக்கமாக அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய தமிழகஅரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் 29-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை வருகிறது. மாத இறுதி நாளாக இருப்பதால் பொருளாதார நெருக்கடியுடனும், மனச்சுமையுடனும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளில் பண்டிகைக்கு முன்பு மாத ஊதியத்தை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. தற்போது புதுச்சேரி அரசு, தீபாவளிக்கு முன்பு அக்டோபர் மாத ஊதியம்
வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஆகவே, தமிழக அரசு ஊழியர்களும் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அக்டோபர் மாத ஊதியத்தை முன்னதாக வழங்க வேண்டும்.

மேலும், தமிழக அரசில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு ஆறு மாதம் என்பது ஒன்பது மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது அறிவித்தார். முதலமைச்சரின் மேற்கண்ட அறிவிப்பின் அடிப்படையில் மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக உயர்த்தியதற்கான அரசாணை நாளது வரை வெளியிடப்படாமல் உள்ளது.

எனவே, முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி மகப்பேறு விடுப்பை ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதமாக உயர்த்தி அரசாணையை உடனடியாக வெளியிடவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H