ஆசிரியர் என்பது ஒரு தகுதி அல்ல. அது ஒரு தன்மை. (It is not a qualification,
but a quality).
சிறந்த ஆசிரியருக்கான மூன்று இலக்கணங்களை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
சொலல் வல்லன் – ஆசிரியருக்கு சொல்வன்மை வேண்டும். நினைத்ததை சரியான முறையில் திறம்பட எடுத்துக்கூறுபவன் தான் சொலல் வல்லன்.
சோர்விலன் – பலதரப்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியாகப் புரியாது. எல்லோருக்கும் புரிகிற மாதிரி திரும்ப திரும்ப சொல்ல வேண்டும். சோர்வடையக் கூடாது.









