உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகலில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி. ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகலில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி. ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...