மனம் மாறிய நோபல்
ஆல்பர்ட் நோபல், "டைனமைட்'' (Dynamite) எனும் வெடிபொருளைக் கண்டுபிடித்து வியாபாரம் செய்தார். இதில் அவருக்குப் பெருமளவு லாபம் கிடைத்தது. போருக்கு மட்டுமல்ல,பெரிய பெரிய பாறைகளை உடைக்கவும், பள்ளங்கள் உண்டாக்கவும் டைனமைட்டைப் பயன்படுத்துகிறார்கள். ஆயினும் யுத்தங்களின்போதுதான் டைனமைட் பெருமளவு பயன்படுத்தப்படுகிறதுஇந்தக் காலத்தில் நோபல், பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். "சற்று வயதான, பணக்காரரும் மனைவியை இழந்தவருமான ஒருவருக்கு மனைவியாக, துணிவும் பக்குவமும் உள்ள பெண் தேவைப்படுகிறாள்.''
விளம்பரத்தைப் பார்த்து நிறைய பெண்கள் வந்தார்கள். ஆல்பர்ட் நோபல், பிர்த்தாகின்ஸ்கி எனும் பெண்ணை மனைவியாகத் தேர்ந்தெடுத்தார்.
இருவரும் ஒன்றாக வாழத் தொடங்கியபோதிருந்தே பிர்த்தா, "டைனமைட் விற்பதை நிறுத்துங்கள். இது ஒரு மரண வியாபாரம். இதனால் மக்களுக்கு ஏற்படும் தீமைதான் அதிகம்'' என்று நோபலை வலியுறுத்தினாள். இதையே திரும்பத் திரும்ப அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால், அவள் சொன்னதை நோபல் கேட்கவில்லை. தன் வற்புறுத்தல்களுக்கு பயனில்லை என்றறிந்த பிர்த்தா,நோபலை விட்டுப் பிரிந்து சென்றாள். ஆயினும் அவளிடமிருந்து வரும் கடிதங்களிலெல்லாம் இந்த அறிவுரை கட்டாயம் இருக்கும்.ஆல்பர்ட் நோபல், "டைனமைட்'' (Dynamite) எனும் வெடிபொருளைக் கண்டுபிடித்து வியாபாரம் செய்தார். இதில் அவருக்குப் பெருமளவு லாபம் கிடைத்தது. போருக்கு மட்டுமல்ல,பெரிய பெரிய பாறைகளை உடைக்கவும், பள்ளங்கள் உண்டாக்கவும் டைனமைட்டைப் பயன்படுத்துகிறார்கள். ஆயினும் யுத்தங்களின்போதுதான் டைனமைட் பெருமளவு பயன்படுத்தப்படுகிறதுஇந்தக் காலத்தில் நோபல், பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். "சற்று வயதான, பணக்காரரும் மனைவியை இழந்தவருமான ஒருவருக்கு மனைவியாக, துணிவும் பக்குவமும் உள்ள பெண் தேவைப்படுகிறாள்.''
விளம்பரத்தைப் பார்த்து நிறைய பெண்கள் வந்தார்கள். ஆல்பர்ட் நோபல், பிர்த்தாகின்ஸ்கி எனும் பெண்ணை மனைவியாகத் தேர்ந்தெடுத்தார்.
ஒரு நாள் நோபலின் சகோதரர் விபத்தொன்றில் இறந்து போனார். பத்திரிகைகள் தவறாக, "ஆல்பர்ட் நோபல் இறந்தார்' என்று எழுதின. இன்னொரு பத்திரிகை "மரணத்தின் வியாபாரி இறந்தார்'' என்று தலைப்புக் கொடுத்திருந்தது.
டைனமைட் தொழிலை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தும் கடிதங்கள் பிர்த்தாவிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. மிகவும் மனம் கலங்கினார் நோபல். அவரால் உறங்கவே முடியவில்லை. தீவிரமான யோசனைக்குப் பிறகு ஒரு முடிவிற்கு வந்தார். டைனமைட் வியாபாரத்தை நிறுத்தினார். தன் பெரும் செல்வத்தில் ஆறு சதவிகிதத்தைத் தவிர மிச்சத்தையெல்லாம் மருத்துவம், வேதியியல், இயற்பியல், இலக்கியம் ஆகியவற்றில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசளிப்பதற்காக ஒதுக்கி வைத்தார்.
1901-ஆம் ஆண்டு முதல் எல்லா வருடமும், நோபலின் நினைவு நாளான அக்டோபர் பத்தாம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நோபல் பரிசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பிர்த்தா.