பூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.... டிசம்பர் 7- ஆம் தேதி ஏவப்படுகிறது
பூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளுடன்
பி.எஸ்.எல்.வி – 36 ராக்கெட் வருகின்ற 7- ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோளுக்கு ரிசோர்ஸ்சாட்-2ஏ ஏன பெயரிடப்பட்டுள்ளது.
ரிசோர்ஸ்சாட் – 2ஏ எனும் செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து
பி.எஸ்.எல்.வி – 36 ராக்கெட் மூலம் டிசம்பர் 7- ஆம் தேதி காலை 10.24
மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் 1235 கிலோ
எடையுள்ளதாகும். 18 நிமிடங்களுக்கு பிறகு செயற்கைக்கோளானது 817 கிமீ
தொலைவில் சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுவதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
ரிசோர்ஸ்சாட் – 2ஏ செயற்கைக்கோள் ரிமோட்
சென்சிங் செயற்கோளாகும். பூமியின் மூன்று அடுக்குகளையும் படம் பிடிக்க
இதில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, 200 ஜிபி அளவுள்ள
ரெக்கார்டரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரெக்கார்டில் கேமராவில்
பிடிக்கப்படும் புகைப்படங்கள் பதிவு செய்யப்படுகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...