CBSE, பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்க ஆலோசனை
உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில்,
பிப்ரவரி முதல் மார்ச் 8 வரை, பல கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல்
பணியில், பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு, வழக்கமாக மார்ச், 1ம் தேதி துவங்கி ஏப்ரலில் முடியும்; தேர்வு முடிவுகள், மே, மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.
சி.பி.எஸ்.இ., அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு, வழக்கமாக மார்ச், 1ம் தேதி துவங்கி ஏப்ரலில் முடியும்; தேர்வு முடிவுகள், மே, மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.
இப்போது,ஐந்து
மாநில தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால், பிளஸ் 2 தேர்வை, 10
நாட்கள் தள்ளி வைக்க, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
தேர்வுகளை, மார்ச் 12 முதல் துவக்கலாம் என ஆலோசித்து வருவதாக தகவல்
வெளியாகியுள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் ஆசிரியர்கள்
கூறுகையில், 'தேர்வை தள்ளி வைப்பதால் எந்த பிரச்னையும் ஏற்படாது. தேர்வு
முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. தேர்வுகளுக்கு இடையே
உள்ள விடுமுறை நாட்களை குறைத்தால் போதும்; தாமதத்தை சரி செய்து
விடலாம்' என்றனர். அடுத்த வாரம், தேர்வு தேதியை,சி.பி.எஸ்.இ., அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.