பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசின், 'நெட்' தகுதி தேர்வு அல்லது மாநில அரசுகள் நடத்தும், 'செட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள எந்த கல்லுாரி, பல்கலையிலும், உதவி பேராசிரியராக பணியில் சேரலாம். மாநில அரசு நடத்தும் செட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே உதவி பேராசிரியராக சேர முடியும். கடந்த ஆண்டு செட் தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா பல்கலை நடத்தியது. ஜன., 20ல் அறிவிப்பு வெளியிட்டு, பிப்., 22ல் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு செட் தேர்வை நடத்துவதற்கு, தெரசா பல்கலை துணை வேந்தர் வள்ளி தலைமையில், புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசின், 'நெட்' தகுதி தேர்வு அல்லது மாநில அரசுகள் நடத்தும், 'செட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள எந்த கல்லுாரி, பல்கலையிலும், உதவி பேராசிரியராக பணியில் சேரலாம். மாநில அரசு நடத்தும் செட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே உதவி பேராசிரியராக சேர முடியும். கடந்த ஆண்டு செட் தேர்வை, அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா பல்கலை நடத்தியது. ஜன., 20ல் அறிவிப்பு வெளியிட்டு, பிப்., 22ல் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு செட் தேர்வை நடத்துவதற்கு, தெரசா பல்கலை துணை வேந்தர் வள்ளி தலைமையில், புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.








