தீராத தலைவலியை போக்கும் முத்திரை :
இதில், ஐம்புலன்களையும் குறிக்கும் ஐந்து விரல்களே நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அபான வாயு முத்திரை எனப்படும் மிருத்த சஞ்சீவினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் தலைவலி குறையும்.
இந்த முத்திரையை செய்வதற்கு முதலில் ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடியை தொடவேண்டும். பின்னர் நடு விரலையும், மோதிர விரலையும் கட்டை விரலின் நுனியை தொடவேண்டும். சுண்டு விரலை மேலே நீட்டவேண்டும். இந்த முத்திரை இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்பதால் இதய முத்திரை என்றும் கூறுவார்கள்.
இதேபோல் பட்சி முத்திரை செய்தும் தலைவலியை விரட்டலாம். இந்த முத்திரை செய்வது மிகவும் எளிது. ஆள்காட்டி விரலை சற்று மடக்கி, பெருவிரல் நுனியோடு இணைக்கவும். மற்ற மூன்று விரல்களையும் உள்ளங்கையில் சேருமாறு மடக்கி கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்த முத்திரையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.