பள்ளிப் பாடத்தில் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்க்கை வரலாறு: வெங்கய்ய நாயுடு யோசனை
தியாகராஜ சுவாமிகள் உள்ளிட்ட சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாறு,
அவர்கள் படைத்த கீர்த்தனைகள் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும் என
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு யோசனை கூறினார்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா அறக்கட்டளை மற்றும் சேவா சமிதி சார்பில் கர்நாடக சங்கீத இசை மேதை தியாகராஜ சுவாமிகளின் 250-ஆவது ஜயந்தி விழா மற்றும் மும்மூர்த்திகள் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியது: இளம் தலைமுறையினர் சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல விதமான பாரம்பரியங்களைக் கொண்ட நாம் இந்தியர்களாக ஒன்றுபட்டு இருக்கிறோம். ஆனால் அந்நியர்களின் படையெடுப்பு, சுரண்டல் காரணமாக நமது பாரம்பரியத்தை இழந்திருந்தோம். தற்போது அதிலிருந்து மீண்டு பாரம்பரியத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
குற்றமாகப் பார்க்கப்படும் பாரம்பரியம்: நாட்டிலேயே தமிழகம் மட்டும்தான் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. ஹிந்து என்ற சொல் நமது பாரம்பரியத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான சொல். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வார்த்தை அரசியலுக்காக குற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இசை மனதுக்கு ஆத்ம திருப்தியை வழங்குவதோடு, சாந்தம், பரவசம், ஆன்மிகம் போன்றவற்றை நமக்கு அளிக்கிறது. அத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தை தியாகராஜர், சியமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் நமக்கு வழங்கியுள்ளனர். இத்தகைய பாரம்பரிய சிறப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். தியாகராஜ சுவாமியின் அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு ஆவன செய்யும் என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழா மலரையும் வெளியிட்டார்.
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் ஆகியோர், இசை பாரம்பரியமாக இருந்து வருகிறது. வட மாநிலத்தவரும் கற்றுக் கொள்ளும் வகையில் இத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தைப் பரப்ப வேண்டும். அத்துடன் பக்தி மார்க்கங்கள் வளர வேண்டும் என்றனர்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா அறக்கட்டளை மற்றும் சேவா சமிதி சார்பில் கர்நாடக சங்கீத இசை மேதை தியாகராஜ சுவாமிகளின் 250-ஆவது ஜயந்தி விழா மற்றும் மும்மூர்த்திகள் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியது: இளம் தலைமுறையினர் சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல விதமான பாரம்பரியங்களைக் கொண்ட நாம் இந்தியர்களாக ஒன்றுபட்டு இருக்கிறோம். ஆனால் அந்நியர்களின் படையெடுப்பு, சுரண்டல் காரணமாக நமது பாரம்பரியத்தை இழந்திருந்தோம். தற்போது அதிலிருந்து மீண்டு பாரம்பரியத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
குற்றமாகப் பார்க்கப்படும் பாரம்பரியம்: நாட்டிலேயே தமிழகம் மட்டும்தான் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. ஹிந்து என்ற சொல் நமது பாரம்பரியத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான சொல். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வார்த்தை அரசியலுக்காக குற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இசை மனதுக்கு ஆத்ம திருப்தியை வழங்குவதோடு, சாந்தம், பரவசம், ஆன்மிகம் போன்றவற்றை நமக்கு அளிக்கிறது. அத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தை தியாகராஜர், சியமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் நமக்கு வழங்கியுள்ளனர். இத்தகைய பாரம்பரிய சிறப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். தியாகராஜ சுவாமியின் அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு ஆவன செய்யும் என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழா மலரையும் வெளியிட்டார்.
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் ஆகியோர், இசை பாரம்பரியமாக இருந்து வருகிறது. வட மாநிலத்தவரும் கற்றுக் கொள்ளும் வகையில் இத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தைப் பரப்ப வேண்டும். அத்துடன் பக்தி மார்க்கங்கள் வளர வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...