முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை புதிய விதியை எதிர்த்து தனியார் கல்லூரி வழக்கு: இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு:
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மருத்துவக்
கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய விதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்
சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை உயர்
நீதிமன்றத்தில் சவீதா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மருத்துவப்
படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த பிப்ரவரி 23ல் நடந்து முடிந்தது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வின் அடிப்படையில் முறையான
நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதில் 36 மாணவர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதுநிலை மருத்துவப்
படிப்புக்கான மாணவர் சேர்க்கை விதியில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒரு
புதிய விதியைக் கொண்டுவந்துள்ளது. அதில், பொதுக் கவுன்சிலிங் மூலம்தான்
மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இந்த பொதுக் கவுன்சிலிங் அந்தந்த மாநில
அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவக்
கவுன்சிலின் இந்த புதிய விதியால் எங்கள் உரிமை பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே
நீட் தேர்வின் அடிப்படையில் உள்ள மாணவர் சேர்க்கை விதிமுறைகளின்படிதான் 36
மாணவர்களுக்கும் சேர்க்கை தரப்பட்டுள்ளது. எனவே, தற்போது மருத்துவக்
கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய விதியை ரத்து செய்ய வேண்டும். அந்த
விதிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில்
கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த்
ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த
நீதிபதிகள், மனுதாரர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு
சேர்க்கப்பட்ட 36 பேரின் சேர்க்கையும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு
கட்டுப்படும். இந்த 36 பேரும் மாநில அரசு நடத்தும் கவுன்சிலிங்கில்
கலந்துகொள்ளலாம் என்று உத்தரவிட்டனர். வழக்கு வரும் 20ம் தேதிக்குத்
தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...