Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!
படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும்
தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப்
பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித்
துறையும்.
"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய
ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர்
மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும்
எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை
என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத்
தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.
"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர்
தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில்
படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர்
வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு
செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத்
தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக
இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற
வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000
கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால்
போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக
கவனமும் செலுத்த முடியும்" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு
அதிகாரிகள்.
'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும்
அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக
அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி
துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில்
மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில்
படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற
வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள்
உயர்கல்வி துறையினர்.
இந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட
பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி
மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை
வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்
"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில்
மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும்
கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி
அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம்.
இதன்மூலம் துணைவேந்தர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும்
மேம்பாடு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில்
பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு
செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள்
கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்கிறார் உயர்கல்வித்துறை
செயலர் சுனில் பாலிவால்.
Posted Date : 21:34 (26/07/2017) Last updated : 21:34 (26/07/2017)
அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!
ஞா. சக்திவேல் முருகன் ஞா. சக்திவேல் முருகன்
படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும்
தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப்
பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித்
துறையும்.
பொறியியல் பட்டம்
"இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்போது 2011-ம் ஆண்டிலும், அதற்கு முந்தைய
ஆண்டுகளிலும் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் 2017-ம் ஆண்டு நவம்பர்
மாதத்தில் நடக்கவிருக்கும் செமஸ்டர் தேர்வில் அனைத்து அரியர் தேர்வுகளையும்
எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை
என்றால் அடுத்தடுத்த தேர்வுகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதனால் பொறியியல் பட்டத்தைப் பெறமுடியாது" என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத்
தேர்வுக்கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள்.
"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவர்கள் இன்னமும் அரியர்
தேர்வுகளை எழுதி வருகிறார்கள். மேலும், தற்போது பொறியியல் பாடப்பிரிவில்
படிப்பவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர்
வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்காக, ஒவ்வொரு
செமஸ்டர் தேர்வின் போதும் 6,000-க்கும் மேற்பட்ட கேள்வித்தாள்களைத்
தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய வேலைப்பளுவாக
இருக்கிறது. இனி, படித்து முடித்து மூன்று ஆண்டுக்குள் தேர்ச்சி பெற
வேண்டும் என்று கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதன் மூலம் 6,000
கேள்வித்தாள்கள் தயாரிப்பதற்கு பதிலாக 1,800 கேள்வித்தாளைத் தயாரித்தால்
போதும். இதன் மூலம் எங்களுக்கு நேரமும் மிச்சமாகும், மதிப்பிடுதலில் அதிக
கவனமும் செலுத்த முடியும்" என்கிறார்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு
அதிகாரிகள்.
'பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும்
அமல்படுத்த பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. இதனை உடனடியாக
அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக உயர்கல்வி
துறை. இதன் ஒரு பகுதியாக, விரைவில் கல்லூரி அளவில் தேர்வுமுறைகளில்
மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. இதில் 'பொறியியல் பாடப்பிரிவில்
படிப்பவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற
வேண்டும் என்பதும், ஆர்க்கிடெக்சர் படிப்பவர்கள் எட்டு ஆண்டுக்குள்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் மிக முக்கியமானது' என்கிறார்கள்
உயர்கல்வி துறையினர்.
இந்தக் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தையும், மாணவர்கள் விருப்பப்பட்ட
பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை விரிவுப்படுத்தவும் முயற்சி
மேற்கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பை
வெளியிடப்படும் எனத் தெரிகிறிது.பொறியியல் சுனில் பாலிவால்
"இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் மதிப்பீட்டு முறைகளில்
மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும்
கட்டுமானம் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், மேம்படுத்தவும் தனி
அமைப்புகள் நிறுவ ஏற்பாட்டை மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம்
துணைவேந்தர்களின் வேலைப்பளுவைக் குறைக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும் முடியும். பல்கலைக்கழகங்களில்
பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு
செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் போல புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
மேலும், பல்கலைக்கழக பணிக்குத் தேர்வு செய்ய வெளிப்படையான நடைமுறைகள்
கடைப்பிடிக்க விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்" என்கிறார் உயர்கல்வித்துறை
செயலர் சுனில் பாலிவால்.
இதுவரை பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமே மாற்றங்கள் குறித்த செய்தியை
அறிந்த கல்வியாளர்கள், முதல்முறையாக உயர்கல்வி துறையில் நடக்கவிருக்கும்
மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









