*வங்கிக் கணக்கில் திருடு போகும் பணம் பற்றி மூன்று நாட்களுக்குள் புகார் அளித்தால் பணம் திரும்பச் செலுத்தப்படும்! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு*இணைய முறைகேடுகளால் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்கள் மூன்று நாள்களுக்குள் வங்கியில் புகார் அளித்தால், அவர்களது வங்கிக் கணக்கில் பணம் திரும்பச் செலுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. அதேநேரத்தில் இணையம் மூலம் பணத்தை ஏமாற்றுவதும் பெருகி வருகிறது. ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தால்,, பணத்தை திரும்பப் பெறுவது மிகுந்த சிரமமமாக இருந்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 'வங்கிகளின் பங்களிப்பு, பற்றாக்குறை, அலட்சியம் ஆகியவற்றால் பணத்தை இழந்தால், வங்கிகள் அந்தப் பணத்தை திரும்ப அளிக்கும்.
மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்து போது இழப்பு ஏற்பட்டால் மூன்று நாளைக்குள் வங்கிகளில் தகவல் தெரிவிக்கவேண்டும். அப்போது முழு பணம் பிடித்தம் இல்லாமல் 10 நாள்களுக்குள் திரும்ப செலுத்தப்படும்.
பண இழப்பு ஏற்பட்டு 4-7 நாள்களில் தகவல் தெரிவித்தால், 25,000 பிடித்தம் செய்யப்படும்.. ஏழு நாள்களுக்கு பின்னர் வங்கியில் தகவல் தெரிவித்தால், பணம் பிடித்தம் செய்யவேண்டிய அளவை வங்கிகளே தீர்மானிக்கும்.