தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையுடன் இணைந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர்கள் டெங்கு அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் குப்பைகள், தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வைக்க கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். இதையும் மீறினால், அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே ஊத்தங்கரை பகுதியில் மாவட்ட கலெக்டர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சுற்றி சுகாதாரம் இல்லாமல் இருந்தது. ஏற்கனவே, உள்ளாட்சி துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அறிவுறுத்தியுள்ளனர். அப்போது, இதுபோன்ற குப்பைகள் தேங்கி இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.மாவட்ட கலெக்டர்கள் டெங்கு அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் குப்பைகள், தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வைக்க கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். இதையும் மீறினால், அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இதையொட்டி இன்று, ஆய்வு செய்த கலெக்டர் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட பள்ளியை 20 நாளுக்கு மூட உத்தரவிட்டார்.
பகிா்வு..எம்.விஜயன்