நாள் : 31.12.2017
பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய ஆசிரியர் பெருந்தகைகளுக்கு
வணக்கம்.
☀31.12.17 இன்று ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் திரு.தாஸ் & திரு.அன்பரசு தலைமையில் சென்னையிலுள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவராகிய நான் கலந்து கொண்டேன்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
☀03.01.2018 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது
☀06.01.2018 அன்று மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது.
☀ஜனவரி 9 & 10 தேதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டமன்றக் கூட்டத் தொடரில் நமது கோரிக்கைகளை எதிரொலிக்கச் செய்தல்.
☀7.2.2018-ல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கருத்தரங்கம் நடத்துதல். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களைப் பங்கேற்கச் செய்தல்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
☀புதிய ஆண்டிற்குள்ளாக அடியெடுத்து வைக்கவுள்ள நாம், நமது உரிமைகளை முற்றிலுமாக மீட்டெடுக்கும் உத்வேகத்தோடே எதிர்வரவுள்ள களத்திற்குத் தயராவோம்.
☀பேரியக்கத்தின் மாவட்ட,கல்வி மாவட்ட,வட்டார மற்றும் இயக்கத்தின் இமயமான அனைத்து உறுப்பினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை மாநில அமைப்பின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கு.தியாகராஜன்,
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்







