

கூடி பேசும் தொலைக்காட்சி அன்பர்களே -இதனையும் கூடி பேசி ஒரு நல்ல முடிவை இந்த சமூகத்திற்கு தாருங்களேன் :
மாணாக்கரும்..ஆசிரியரையே கொலை செய்யத் துணியும் மாணவர்களும் இந்த சமூகம் சார்ந்த அவலங்களாக பார்த்து இவைகுறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் அமைப்பு,கிராம கல்விக்குழு, மக்கள் மன்றம், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் மக்கள் பிரதிநிதிகள்,சட்ட,நாடாளுமன்றம் போன்றவற்றில் கட்டாயம் விவாதம் செய்ய வேண்டும்.
நாளை என் மாணவர்களைக் கண்டிக்கும் போதுஅவன் என்னைப்பார்த்து
"ஏ வாத்தி ..திருப்தூர் HM க்கு ஏற்பட்ட கதை தெரியும் தானே?"என ஏளனமாக கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?பல ஆசிரியரும் நமக்கு ஏன் வம்பு...என்று அப்பா திரைப்படத்தில் வரும்மூன்றாம் ரக அப்பா போல"இருந்த இடம் தெரியாம வாழ்ந்திட்டுப்போயிடனும்டா"என மாறும் நிலை வரலாமன்றோ?எங்கள் தேசம் நிலம்,நீர், மாநிலம், மொழி மட்டுமல்ல...
அது தூய உள்ளம் கொண்ட மனிதர்களை உள்ளடக்கியது;அது வகுப்பறையில் வகுக்கப்பட வேண்டிய ஒன்று!யாரையும் பழி போட வேண்டாம்;யார் மீதும் குற்றம் கூறுவது இந்த பொழுதை கழித்திட உதவுமே தவிர தீர்வாக அமையாது.பிப்ரவரி,மார்ச் வந்தாலே மாணவர்கள் மன அழுத்தம் நிறைந்தவர்களாய் இருப்பர்.பள்ளியில் மின்சார இணப்பு, பெஞ்ச, டெஸ்க், சுவிட்ச் போர்டு இவற்றை உடைப்பர்...இன்று ஒரு மனித இதயத்தை உடைத்துள்ளனர்.இவை கவலையுடன் விவாதித்து தீர்வுகாண வேண்டும்.என்றும் நட்புடன் ப.லாரன்ஸ்.