புதுடெல்லி:
பி.எஸ்.என்.எல்.
பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா உள்ளிட்டவை
வழங்கப்படுகிறது.
ரூ.448க்கு
அறிவிக்கப்பட்டிருக்கும் பி.எஸ்.என்.எல். சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ்
கால் (உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங்), தினமும் 1 ஜிபி டேட்டா, ரிங்பேக்
டோன் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு
வழங்கப்படுகிறது.
இதே விலையில் ரிலையன்ஸ் ஜியோ
மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும்
டேட்டா சலுகைகளை வழங்குகின்றன. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் 84 நாள்
வேலிடிட்டி கொண்ட சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா
வழங்கப்படுகிறது.

பாரதி
ஏர்டெல் வழங்கும் சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா 82 நாட்களுக்கு
வழங்கப்படுகிறது. டேட்டா தவிர அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (உள்ளூர்,
வெளியூர், தேசிய ரோமிங்) மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை
வழங்கப்படுகிறது. சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மேக்சிமம் சலுகையை
அதன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது.
பி.எஸ்.என்.எல்.
மேக்சிமம் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா
வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு இதர சேவைகளும் வழங்கப்படுகிறது. அதிவேக
1ஜிபி டேட்டா நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி-யாக (40Kbps)
குறைக்கப்படும். புதிய மேக்சிமம் பிரீபெயிட் சலுகையை பி.எஸ்.என்.எல். தனது
அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.
பி.எஸ்.என்.எல்.
மேக்சிமம் திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங் மற்றும் தினமும்
100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை முதல் 182 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
182-வது நாள் முதல் 365 நாட்கள் வரை அனைத்து பி.எஸ்.என்.எல்.
வாடிக்கையாளர்களும் வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்திற்கு 60 பைசா செலுத்த
வேண்டும். இதே கட்டணம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கும்
பொருந்தும். எஸ்.எம்.எஸ். ஒன்றிற்கு 25 பைசாவும், தேசிய எஸ்.எம்.எஸ்.
அனுப்ப 35 பைசா செலுத்த வேண்டும்.