தாய்,தந்தையரின் கண்டிப்பு ஒரு மகனுக்கு பிடிக்கவில்லை.‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,பேனாவை ஸ்டாண்டில் வை,கீழே கிடக்குது பார்.இப்படியே சின்னச்சின்ன செயல்களுக்கு அப்பாவும், அம்மாவும் அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டிஇருந்தது.இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்து இருந்தது..வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும்.
நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டிஇருந்தது.இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்து இருந்தது..வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும்.
தாய்,தந்தையரின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.நேர்காணலுக்கு கிளம்பினான்.
“கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.
நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை.
கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது.குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
மெதுவாக மாடிப்படியில் ஏறினான்.நேற்று இரவில் போடப்பட்டவிளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.
“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
பதற்றத்துடன் நேர்கானல் நடக்க இருக்கும் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.
அதையும் வருத்தத்துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.
அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.
”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்..
இவன் முறை வந்தது..நேர்காணல் அதிகாரி முன்பு போய் நின்றான்.சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே“நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“”குழம்பி நின்றான் மகன்.”என்ன யோசிக்கிறீர்கள்? என்று நேர்கானல் அதிகாரி கேட்டார்,
நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்க வில்லை .கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம்.
அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம்.
இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை.
நீங்கள் ஒருவர்தான் பொறுப்புடன் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்..
ஆம்.,நண்பர்களே..
தாய்,தந்தையர் நமக்காக எது செய்தாலும், சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும்..
உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவதில்லை, வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.
நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.
எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் எந்தப் பயனும் இல்லை..🌸🙏🌹