✍ஒரு தொகுதிக்கு சுமார் 250 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர் (BLO ) நியமிக்கப் படுகின்றனர்.
✍234 தொகுதிக்கு சுமார் 234*250=58500 வாக்குச் சாவடி அலுவலர்கள் பணியமர்தப்பட்டு வருகின்றனர்.
✍வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமனத்திற்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1950 13B(2) பிரிவின் கீழ் 13 வகை அரசு | அரசு சார்ந்த துறையில் பணிபுரியும் பணியாளர்கள் BLO பணிக்கு உட்படுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை தந்துள்ளது....
1. சத்துணவு அமைப்பாளர் / அங்கன்வாடி பணியாளர்கள்
2. தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள்
3. கிராம நிர்வாக அலுவலர்
4. ஊராட்சி செயலாளர்
5. மின் கணக்கீடு செய்பவர்
6 அஞ்சலக ஊழியர்
7. துணை செவிலியர் & பேறு கால உதவியாளர்
8. சுகாதார பணியாளர்கள்
9. மதிய உணவு பணியாளர்
10. மாநாகராட்சி தண்டர்
11. கிராம பணியாளர்கள்
12. மேல்நிலை/ கீழ்நிலை எழுத்தர்
13. ஆசிரியர்கள்
✍மேற்கண்ட 13 வகை பணியாளர்களுக்கு BLO பணியை பகிர்ந்து அளிக்காமல் சேலம் மாவட்டத்தில் 90% ஆசிரியர்களை ( முழு நேர பணியாளர்) BLO வுக்கு உட்படுத்தப்பட்டு கல்வி நிலை , கல்வி தரம் சீரழிந்து வருகிறது.
✍ஒரு நடுநிலை பள்ளியில் சுமார் 8 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். அதில் 3 முதல் 4 ஆசிரியர்களையும் , தொடக்கப் பள்ளியில் சுமார் 2 முதல் 4 (அ) 5 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். அதில் 1 முதல் 2 (அ) 3 ஆசிரியர்களையும் BLO பணிக்கு உட்படுத்தி வருகின்றனர். ஆகையால் BLO கூட்டம் நடத்தும் போது பள்ளியில் ஆசிரியர்கள் இல்லா நிலை ஏற்படுகிறது.
✍சேலம் மாவட்டத்தில் சட்ட மன்ற தொகுதி - 81 முதல் 91 வரை உள்ளது. 11 தொகுதிகளில் சுமார் 3200 க்கும் மேற்பட்ட BLO நியமிக்கப் பட்டுள்ளனர்.
✍சேலம் மாவட்டத்தில் 3200 BLO களில் 90% ஆசிரியர்களை (முழு நேர பணியாளர்) மட்டும் பணியில் அமர்த்தி கல்வி நிலையை சீர்குலைந்து வருகிறது.
✍ஆனால் தென் மாவட்டங்களில் BLO பணிக்கு ஆசிரியர்களை உட்படுத்தாமல் பகுதி நேர பணியாளர்களை BLO பணிக்கு உட்படுத்தி கல்வி நிலையை பாதுகாத்து வருகின்றனர்.
✍உதாரணமாக ......
👉திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட BLO பணி அமர்தப்பட்டுள்ளனர். இதில் 80% சத்துணவு அமைப்பாளர் , அங்கன்வாடி பணியாளர் மற்றும் கிராம பணியாளர்களை நியமனம் செய்துள்ளனர். 20% ஆசிரியர்களை உட்படுத்தி கல்வி நிலை பாதுகாத்துள்ளனர்.
👉திருநெல்வேலி மாவட்டத்தில் 10 தொகுதிகளில் சுமார் 2900 க்கும் மேற்பட்ட BLO பணி அமர்தப்பட்டுள்ளனர். இதில் 90% சத்துணவு அமைப்பாளர் , அங்கன்வாடி பணியாளர் மற்றும் கிராம பணியாளர்களை நியமனம் செய்துள்ளனர். 10% ஆசிரியர்களை உட்படுத்தி கல்வி நிலை பாதுகாத்துள்ளனர்.
✍சேலம் மாவட்டத்தில் கல்வி நிலை , கல்வி தரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகையால் ஆசிரியர்களுக்கு BLO பணியினை குறைத்து , பணியினை பகிர்ந்து மற்ற 12 வகை பணியாளர்களுக்கு வழங்க தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த 25/02/2018 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
✍சேலம் மாவட்ட ஆட்சியர் நமது சங்க மனுவினை படித்து கவனத்தில் எடுத்து கொள்வதாக கூறினார்.
✍சேலம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு android mobile ல் BLO Register app மூலம் வாக்களார் பட்டியல் மரம் (Family Tree) தயாரிக்க இரண்டு கட்டமாக கூட்டம் நடத்தப்பட்டது.
✍சேலம் மாவட்டத்தில் பல வளரா கிராமங்கள் இருந்து வருவதால் அங்கு mobile ல் Net server குறைவாக காணப்படுகிறது. ஆகையால் பல ஆசிரியர் நண்பர்கள் voter list latitude முடிக்க முடியாத நிலை உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
✍இனி வரும் காலங்களில் எம் ஆசிரியர் இன நண்பர்களுக்கு வேலை பளுவினை குறைத்து BLO 12 வகையான பணியாளர்களுக்கு பணியினை பகிர்ந்து அளித்து கல்வி பணி சிறந்து செயல்பட வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🌸🌸🌸🌸🌸🌸
நே.மகேஸ்வரன் ,
தலைவர் , TATA ,
சேலம்.








