பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3.92 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும், 2.17
லட்சம் இடைநிலை ஆசிரியர்களும் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால்,
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பணி இடங்களும் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், உயர்நிலைப்
பள்ளிகளில் 884 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 34
தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
கற்றுத்தருவதற்கு ஆசிரியர்களே இல்லாத நிலையில், மாணவர்கள் எவ்வாறு தேர்வினை
துணிவோடு எழுத முடியும்? இதனால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு
ஆளாகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் 100 சதவீத மாணவர்கள் தேர்வடைய வேண்டுமென
தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்துவது நியாயம் தானா?
மாணவர்களின் கல்வித் தரம் உயர அனைத்துப் பாடங்களுக்கும், தனித் தனியாக
பாடம் வாரியாக ஆசிரியர்களை உடனடியாக நியமிப்பது அவசியம் எனத்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...