உலகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில் தான்’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று. `உண்மையில், மாரடைப்பு போன்ற இதயநோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளும் தவிர்க்கக் கூடியவையே! ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததால் அல்லது அலட்சியப்படுத்துவதால் தான் பலரும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவத் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில், இதற்குப் பல்வேறு பரிசோதனைகளும் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றுதான் ‘ஸ்ட்ரெஸ் டெஸ்ட்’ (Stress Test). சிலருக்கு மாரடைப்புப் பிரச்னை ஆரம்பநிலையில் இருக்கும். ஆனால், அறிகுறிகள் வெளியில் தெரியாது. இ.சி.ஜி எடுத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு ‘ஸ்ட்ரெஸ் டெஸ்ட்’ உதவியாக இருக்கும். இதனால் ஆரம்பநிலையிலேயே இதய அடைப்புகளை
ஸ்ட்ரெஸ் டெஸ்ட்
ட்ரெட்மில் இயந்திரத்தில் ஒருவரை நடக்கவைத்து, அவரின் இதயத்துடிப்பு மாறுதல்களை இ.சி.ஜி மூலம் கண்டறியும் பரிசோதனைக்கு `ட்ரெட்மில் டெஸ்ட்’ (Treadmill Test -TMT) அல்லது `கார்டியாக் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்’ (Cardiac Stress Test) என்று பெயர்.
பரிசோதனை
கம்ப்யூட்டர் மற்றும் இ.சி.ஜி கருவி இணைந்த இயந்திரம் இது. இந்த இ.சி.ஜி-யின் லீடுகளை (Lead) ஒருவரின் கை, கால்கள், மார்பு போன்ற இடங்களில் பொருத்தி, ட்ரெட்மில்லில் குறைந்த வேகத்தில் நடக்கவைப்பார்கள். பின்னர் வேகம் ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும் படிப்படியாக அதிகரிக்கப்படும். இதனால் நோயாளியின் நடை வேகமும், இதயத்துடிப்பும் அதிகரிக்கும். அப்போது இதயத்துடிப்பு, இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றை இ.சி.ஜி கருவி வரைபடமாகப் பதிவுசெய்யும். நான்கு கட்டங்களாக நடக்கும் இந்தப் பரிசோதனையில் ரத்தக்குழாயில் அடைப்பு கண்டறியப்படும்.
நேரம்
10 முதல் 15 நிமிடங்களில் செய்யப்படும் எளிய பரிசோதனை இது.
சோதனையின் அடிப்படை
ஒருவர் சாதாரணமாக இருப்பதைவிட, கடினமான வேலை செய்யும்போது, அதிக ஆற்றல் தேவைப்படும். அதற்கேற்ப இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவில்லை என்றால், அவர்களுக்கு மார்பில் வலி ஏற்படும். அதனால், அவரை வேகமாக நடக்கவைத்து, இதயத்துக்குப் பளுவை அதிகப்படுத்தி, நெஞ்சுவலி வருகிறதா என்பதையும், இ.சி.ஜி காண்பிக்கிற மாற்றங்களை வைத்தும் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதைக் கண்டறிவார்கள்.
பயன்
மறைந்திருக்கும் மாரடைப்பையும் அவ்வப்போது வந்து செல்கிற இதயவலியையும் அடையாளம் காட்ட உதவும் முக்கியமான பரிசோதனை இது.
யாருக்கு அவசியம்?
மார்பில் வலி, இறுக்க உணர்வு உள்ளவர்கள், ரத்த அழுத்தம், நாள்பட்ட சர்க்கரைநோய் உள்ளவர்கள், தலைச்சுற்றல், மயக்கம், மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள். மேலும், இதய நோய் பாதிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வர வாய்ப்பு இருக்கிறது. அவர்களும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
யாரெல்லாம் செய்யக் கூடாது?
* கடுமையான மாரடைப்பு வந்தவர்களும், நிலையில்லாத மாரடைப்பு (Unstable angina)வந்தவர்களும்.
* இதயச் செயலிழப்பு உள்ளவர்கள்.
* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்♨
க் கண்டறிந்து, மாரடைப்பு பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...