வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆடை நெறி குறித்து உத்தரவிடப்படுவதாக நேற்று (ஏப்ரல் 18) வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு டெல்லியில் உள்ள வருமான வரித் துறை தலைமை
அதிகாரியின் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி,
வருமான வரித் துறையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் பணியிட
அமைப்புக்கு ஏற்றவாறு சுத்தமான முறையான தோற்றத்தில் வர வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், “பெருமளவிலான ஊழியர்கள்,
முக்கியமாக இளம் வயதுடையவர்கள் அலுவலகத்துக்கு மிகச் சாதாரணமான ஆடை அணிந்து
வருவதை அடிக்கடி காண முடிகிறது. இதை அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை.
அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாட்கள் சுத்தமான, முறையான, அடக்கமான, உரிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். அலுவலகத்துக்குள் சாதாரண மற்றும் விருந்துகளுக்கான உடைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுகளைக் கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆடை நெறிகளைக் கடைப்பிடிக்காதவர்கள் உடையை மாற்ற மீண்டும் வீட்டுக்கே அனுப்பப்படலாம் என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாட்கள் சுத்தமான, முறையான, அடக்கமான, உரிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். அலுவலகத்துக்குள் சாதாரண மற்றும் விருந்துகளுக்கான உடைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுகளைக் கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆடை நெறிகளைக் கடைப்பிடிக்காதவர்கள் உடையை மாற்ற மீண்டும் வீட்டுக்கே அனுப்பப்படலாம் என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...