இந்தியாவிலுள்ள ஏழை பணக்காரர் வேறுபாடின்றி அனைத்துச் சமூக பொருளாதார தரப்பினரிடையேயும் சர்க்கரை நோய் என்றழைக்கப்படுகின்ற நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ இதழ்கள் தெரிவிக்கின.
கடந்த 16 ஆண்டுகளாகச் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக கூடி வருவதாக மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
கடந்த 16 ஆண்டுகளாகச் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக கூடி வருவதாக மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தற்போது உலகளவிலுள்ள சர்க்கரை நோயாளிகளில் 49 விழுக்காடு நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனா். 2017இன் ஆய்வின்படி, 72 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனா். இது வரும் 2025இல் 134 மில்லியன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். ஆனால், இந்நோயை கட்டுப்படுத்த எந்த முயற்சிகளும் மேற்கொள்ளாமல் அதே சமயத்தில் 50 கோடி மக்களுக்கு இலவசக் காப்பீடு திட்டத்தை அளிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி சர்க்கரை நோய் 64 விழுக்காடு பரவலாகி வருகிறது. உலக வங்கியின் அறிக்கையின்படி, இந்தியாவின் சராசரி வருமானம் 380 டாலர்களிலிருந்து (ரூ.24,867) 1670 டாலர்களாக(ரூ.1,09,000) அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் 123 விழுக்காடு சர்க்கரை நோயும் அதிகரித்துள்ளது.
தேசிய குடும்ப சுகாதார சர்வே 2015-2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செல்வந்த குடும்பங்களில் அவர்களின் வசதிக்கேற்ப ஐந்து குழுவாகப் பிரிக்கப்பட்டனர். அதில் 2.9 விழுக்காடு பெண்களும் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர்..
உலகமயமாக்கல் பொருளாதார கொள்கைகள் நடுத்தர வர்க்கத்தையும் புதிய பணக்காரர் வர்க்கத்தையும் தோற்றுவித்தது. இவர்கள் அதிகமான பணத்தைச் சுவையான மற்றும் வித்தியாசமான உணவுகளுக்கு செலவழிக்கத் தொடங்கினர். இவற்றிலுள்ள சத்துகள் மற்றும் தீய அம்சங்கள் இருப்பதைப் பற்றி கவலைப்படவில்லை.
அதேபோல உடலுழைப்பு அதிகமாக இல்லாத பணிகளும் அதிகரித்தன. இத்துடன் அதிகமான மன அழுத்தங்களை உருவாக்கும் பணிகளும் சூழல்களும் உறவுச் சிக்கல்களும் உருவாகின. இவை சர்க்கரை நோய் உருவாவதற்கான முக்கிய காரணிகள் ஆகும். இவை தவிர்த்து துரித உணவுகள் அல்லது ஜங் புட் எனப்படும் துரித உணவுகள் (புரோட்டா, பர்கர், பீட்சா போன்றவை) இவற்றில் நார்ச்சத்து இருக்காது என்பதால் ஜீரணமாவதும் கடினம். அத்துடன் இவற்றிலுள்ள அதிகமாக கார்போ ஹைட்ரேட் (சுகர்) இருப்பதால் ரத்த ஓட்டத்தில் அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் நீரிழிவு நோய்க்கு அடிப்படையாக மாறுகிறது. மேலும் ரசாயனம் கலக்கப்பட்ட உணவு பயிர்கள் குளிர்பானங்கள் ஆகியனவும் இந்தப் பட்டியலில் சேருகின்றன.
இதற்கு உடனடியான தீர்வு, உணவு முறை முழுவதும் மாற்றப்பட வேண்டும். அதற்குத் திட்டங்களை அரசு தீட்ட வேண்டும். துரித உணவுகள் தடை செய்யப்பட வேண்டும். அமைதியான முறையில் ஆட்களைக் கொல்லும் சர்க்கரை நோய் உடனடியாக கண்டறியப்பட்டு சிகிச்சைகள் தொடங்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்குத் தனியான அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும். அது உடனடியான சிகிச்சை முறைகளுக்கு வழிவகுக்கும்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...