வரும் 24ம் தேதி முதல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை
புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக தமிழக ஆசிரியர் கூட்டணி
அறிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அகில் இந்திய செயலாளர் கூறியதாவது:
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக்குழுவை தமிழக அரசு உடன் அமல்படுத்த வேண்டும். கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம்.
கோரிக்கைகளை அரசு இதுவரை ஏற்கவில்லை. கல்வி நிலையங்களை மூடும் நடவடிக்கையிலும், ஆசிரியர் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இதை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 24ம் தேதி முதல் 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விடைத்தாள் பணியில் ஈடுபடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அகில் இந்திய செயலாளர் கூறியதாவது:
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக்குழுவை தமிழக அரசு உடன் அமல்படுத்த வேண்டும். கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம்.
கோரிக்கைகளை அரசு இதுவரை ஏற்கவில்லை. கல்வி நிலையங்களை மூடும் நடவடிக்கையிலும், ஆசிரியர் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இதை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 24ம் தேதி முதல் 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விடைத்தாள் பணியில் ஈடுபடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...