அம்மா கல்வியகம் சார்பில், மார்ச், 23ல், 'நீட்' தேர்வுக்கான இலவச கையேடு வெளியிடப்பட்டது. இதை, 63 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்தனர். சமீபத்தில், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில், அம்மா கல்வியகத்தில், இலவச கையேடை பதிவிறக்கம் செய்து படித்த, 2,705 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 55 பேர், 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தை சேர்ந்த டெய்லர் மகள் அனிதா என்பவர், இதை மட்டும் படித்து, 337 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என, அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்தார்.








