ஆந்திர மாநிலத்தில் கோடை கால விடுமுறைக்கு பின் கடந்த 12ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அங்கு கோடை முடிந்தும் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை
.இந்நிலையில், ஆந்திராவில் வெயிலின் தாக்கம் மேலும் 3 நாட்கள் நீடிக்கும் என்று அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து
நேற்று முதல் பள்ளிகளுக்கு 3 நாட்களுக்கு மட்டும் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கண்டா சீனிவாஸ் கூறியதாவது:
மாநிலத்தில் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
எனவே
மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1ம்
வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 19ம் தேதிமுதல் 21ம் தேதி வரை 3
நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வருகிற 22ம் தேதி முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...