அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க
விண்ணப்பித்தோருக்கு, இன்னும் ஐந்து நாட்களில், தரவரிசை பட்டியல்
வெளியிடப்பட உள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., -
பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்,
தமிழகஅரசின் சார்பில் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு முதல், 'ஆன்லைன்'
முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப
பதிவு, மே முதல், ஜூன், 2 வரை நடந்தது.இதில், 1.60 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்; இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன், 8ல்
துவங்கி, 17ல் முடிந்தது.இந்நிலையில், மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை
பதிவு செய்யும் பணி, இன்று துவங்க உள்ளது.மாணவர்களின் மதிப்பெண்ணை, அரசின்
தேர்வுத் துறையில் இருந்து, அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் கமிட்டியினர்
நேரடியாக பெற்றுள்ளனர்.மாணவர்களின் பதிவு எண் வாரியாக, இணையதளத்தில்
மதிப்பெண்ணை பதிவு செய்கின்றனர்.இந்த பணிகள், இன்னும் மூன்று நாட்கள்
வரைநடக்கும்.இதையடுத்து, மதிப்பெண் வாரியாக, தரவரிசை பட்டியல்
தயாரிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும், ஐந்து நாட்களில் முடிக்கப்பட்டு,
வரும், 25ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் வெளியாகும் என, அண்ணா பல்கலை
அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்போது, இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...