தமிழகத்திலுள்ள அனைத்து
இரண்டு துறைகளைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் மருத்துவமனைகளிலும் இந்தத் தடை அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளும், சென்னை பாரிமுனையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்திலும் ஜூலை 23 -ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள், காகிதக் கோப்பைகள், தட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்








