2001 -2002 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டதாரி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்கள், இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் வட்டார வள மையங்களில் ஆசிரியர் பயிற்றுனர் ஆக பணிபுரிந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் செய்யப்பட்டு 31.12 .2002 க்குள் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியப் பெருமக்களும் 11.07.2018 மற்றும் 12.07.2018 ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற இருக்கின்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்படும் படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து வழங்க ஏதுவாக தங்களது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.எந்த ஒரு சான்றிதழ்களையும் நகல் எடுக்க தேவையில்லை என்ற தகவலையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
பொன்.செல்வராஜ்
மாநில தலைவர்
TNPPGTA.








