துாக்கம் என்பது உடலுக்கு அத்தியாவசியமானது. உலகளவில் தற்போது இரவில் சரியாக துாக்கம் வராமல் துன்பப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர் வரை துாக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.பகலில் உழைத்த பிறகு இரவில் உடலும் மனமும் ஓய்வெடுத்து கொள்ளும் நிலை தான் துாக்கம். அன்றாட பணிகள் சீராக இருப்பதற்கும், உடல் ஆரோக்கியம் காக்கவும் போதிய துாக்கம் அவசியம். துாங்கும் நேரத்தில் சிலநாள் ஏற்ற இறக்கம் இருந்தால் உடல் ஏற்றுக்கொள்ளும். தொடர்ந்து இருப்பின் உடல்நிலை பாதிக்கப்படும். இந்நிலையில் ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த ஐரோப்பிய கார்டியாலஜி கூட்டமைப்பு மாநாட்டில் ஆய்வு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் துாங்குவது, இருதயத்தின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துாக்கம் என்பது உடலுக்கு அத்தியாவசியமானது. உலகளவில் தற்போது இரவில் சரியாக துாக்கம் வராமல் துன்பப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர் வரை துாக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.பகலில் உழைத்த பிறகு இரவில் உடலும் மனமும் ஓய்வெடுத்து கொள்ளும் நிலை தான் துாக்கம். அன்றாட பணிகள் சீராக இருப்பதற்கும், உடல் ஆரோக்கியம் காக்கவும் போதிய துாக்கம் அவசியம். துாங்கும் நேரத்தில் சிலநாள் ஏற்ற இறக்கம் இருந்தால் உடல் ஏற்றுக்கொள்ளும். தொடர்ந்து இருப்பின் உடல்நிலை பாதிக்கப்படும். இந்நிலையில் ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த ஐரோப்பிய கார்டியாலஜி கூட்டமைப்பு மாநாட்டில் ஆய்வு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் துாங்குவது, இருதயத்தின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









